Sunday 30 November 2008

கல்லூரி கனாக்கள்

வாழ்க்கைப் படகேறி
வழிமாறிப் போனாலும்
வாழுகின்ற காலமெல்லாம்
வழித்துணையாய்க் கூடவரும்.....

நிஜங்களின் அழுத்தத்தில்
நெஞ்சிறுகிப் போனாலும்
கல்லுக்குள் ஈரமாய்க்
கசிந்திருக்கும் காலமெல்லாம்.....

ஆம்!
கல்லூரி நினைவுகளும்
கனாக்கண்ட காலங்களும்
காத்திருக்கும் உயிர்த்தீயை
வாழுகின்ற காலமெல்லாம்...

No comments:

Post a Comment