Monday 17 August 2009

ஈழத்தமிழர் பலமும், பலவீனமும்!-நான் அனுப்பிவிட்டேன்! நீங்கள்?

 

அன்பின் நண்பர்களே!!

நம் வலையுலகம் போல அன்புள்ளங்கள் உலாவும் இடங்கள் மிகவும் அரிது!!

நம்முடைய எழுத்துக்களுக்கு அங்கீகாரமும்

உடனடியான விமரிசனங்களும் கிடைத்துவிடுவது மேலும் மேலும் நம்மை எழுதத் தூண்டுகிறது.

இதற்கு ஒருபடி மேலே சென்று சிங்கைப் பதிவர்களும், தமிழ்வெளி திரட்டியும் இணைந்து நமது எழுத்துக்களுக்கு மேலும் ஒரு கவுரவமாக நம்மை சிங்கப்பூர் அழைத்துச் செல்கிறார்கள்!

நான் இந்தப்போட்டியில் அரசியல் சமூகம் பிரிவில் 4. வது தலைப்பில் எழுதியுள்ளேன்.

பிரிவு-1: அரசியல் / சமூகம் (அச)

இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் politics@sgtamilbloggers.com

1) பெண்ணிய மாயையும், தொடரும் ஆணாதிக்கமும்
2) தமிழகத்தின் தண்ணீர்த் தேவையும் அரசியல் நாடகங்களும் -அன்றும் இன்றும்
3) சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் பலமும் பலவீனமும்
4) ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் - பலமும் பலவீனமும்
5) திராவிட இயக்கத் தோற்றம், வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி
6) இந்தித் திணிப்பை எதிர்த்ததால் நமக்கு விளைந்த நன்மை தீமைகள்
7) இந்திய தேசிய நீரோட்டத்தில் கரைந்து போன தமிழக உரிமைகள்
8) தமிழினத்தின் அடிமை வரலாறும் பண்பாட்டுத் தழுவலும்
9) சமூக அரசியலில், சாதி மதம், ஆதிக்க சக்திகள், அடிமைத்தனம்
10) மக்களை மயக்கும் அரசாங்கத்தின் இலவச அறிவிப்புகளும், நன்மை தீமைகளும்
11) உணர்ச்சிப் பிழம்பான இனமான உணர்வும், அரசியல் பிழைப்பிற்கான மூலதனமும்
12) உலகத் தமிழர்கள் ஒன்றிணைப்பின் தேவையும், தடைகளும்
13) பெரியார் மண்ணில் தலித்களின் நிலையும் பிற மாநிலங்களில் தலித்களின் நிலையும்
14) சமூக அரசியல் தளங்களில் புறக்கணிக்கப்படும் தமிழக மீனவர்கள்
15) உலக மயமாக்கல் தமிழகத்தில் ஏற்படுத்திய விளைவுகள்

4) ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் - பலமும் பலவீனமும்

இந்தத் தலைப்பில் நான் எழுதியுள்ளேன். என்னோடு இதே தலைப்பில் மோதினாலும் சரி இல்லை வேறு தலைப்பில் எழுதினாலும் சரி, விரைவில் எழுத அன்புடன் அழைக்கிறேன்!!

போட்டி இல்லாவிட்டால் நல்லா இருக்காது!!

நமக்காக 15.8.2009 என்ற போட்டிக்கான படைப்புகளை அனுப்பும் இறுதி நாள் மாற்றப்பட்டுள்ளது...

 

கீழே இது தொடர்பான அவர்களின் இடுகை காண்க!

Manarkeni 2009
சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம் இணைந்து நடத்தும் மணற்கேணி 2009 போட்டிக்கான படைப்புகளை அனுப்பும் இறுதி நாள் 15.8.2009 ஆக இருந்தது தற்போது

மாற்றப்பட்டுள்ளது, இது தொடர்பான விரிவான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்....
இது வரை படைப்புகளை அனுப்பியவர்களுக்கு மிக்க நன்றி... அனைவரும் இந்த கட்டுரை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்...

போட்டி முழு விபரம் படிக்க இத்தளம் செல்க!!

மூன்று பேர் இலவசமா சிங்கப்பூர் போகலாம்-டிக்கெட் என்னிடம்!!

மக்களே எழுதுங்க!! விரைவில் எழுதி அனுப்புங்க!!!

Wednesday 3 June 2009

மறதிநோய்,நடுக்குவாதம்(Alziemers&Parkinsons disease)-புதிய சிகிச்சை!!!

இந்த நூற்றாண்டு மருத்துவத்துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பல நோய்களுக்கு மருந்தும் கண்டுபிடிக்கபட்டுள்ளன.அம்மை போன்ற பல நோய்கள் உலகநாடுகள் பலவற்றிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன.

மருத்துவத்துறையில் இன்னும் வளரவேண்டிய முக்கியமான துறை மூளைநரம்பியல் துறையாகும். பார்கின்சன்(நடுக்குவாதம்),அல்சீமர்(ஞாபக மறதி நோய்) ஆகியவை தற்போது மிக அதிகமாகக் காண்ப்படுகின்றன.

அல்சீமர் நோய் என்பது  ஞாபக மறதிநோய் ஆகும்.இது பெரும்பாலும் முதுமையில் வரும். ஆயினும் இதில் முதுமையில் வருவது,முதுமைக்குமுன் வருவது என்று இரண்டு வகைகள் உள்ளன. முதுமைக்கு முன் இந்த நோயாளிகளில் தூக்கம் வராமை(Insomnia) பெரும்பாலும் முதலில் ஏற்படும். பிற்பாடு இரவில் மன உளைச்சல்,குழப்பம் ஆகியவை உண்டாகும். முடிவெடுத்தல், பிரச்சினைகளை அலசுதல் ஆகியவற்றில் குறைபாடுகள் முதலில் ஆரம்பிக்கும். சற்றுமுன் நடந்தவைகள் மறந்து போதலில் ஆரம்பித்து நோய் தீவிரத்தின்போது எங்கு இருக்கிறோம், காலையா?மாலையா? என்பதுகூட தெரியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படும். மூடு மாறுதல், உணர்ச்சிவசப்பட்டு கத்துதல் ஆகியவை ஏற்படும்.

பார்கின்சன் நோய் உள்ளவர்களுக்கு முதலில் கைகளில் சிறு நடுக்கமாக ஆரம்பித்து பின் கால் உடல் என்று அனைத்துப்பாகங்களிலும் நடுக்கம் பரவும். முதலில் வலது அல்லது இடது கையில் ஏற்படும் நடுக்கம் அதிகமாக ஏதாவது ஒருகையில் இருக்கும்.சில வருடங்களில் அடுத்த கையிலும் தெரிய ஆரம்பிக்கும். வலது கையில் வரும்போது ஒருவருடைய கையெழுத்து அழகு குறைந்து கிறுக்கலாக மாற ஆரம்பிக்கும்.

இன்னும் இந்த நோய்களை குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.மருந்துகளால் நாம் இவற்றைக் கட்டுக்குள்தான் வைத்திருக்கமுடியும்.

அனைத்து நரம்பு நோய்களும் தொண்டை,குரல் வளை ஆகியவற்றைத்தாக்கும்.ஏனெனில் இந்தப் பகுதி மிக அதிகமான தசைகளைக்கொண்டது. அதே போல் நரம்புநோய்களில் சாதாரணமாக மூளையில் உள்ள நரம்பு செல்கள் அழிவு அதிகமாக ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.இவற்றில் மூளையில் உள்ள மொழி,இசை ஆகியவற்றின் நரம்புப் பாதைகள் மிகவும் சிக்கலானவை. நரம்பு நோய் தாக்கப் பட்டவர்களின் குரல் சத்தம் குறைதல்,விழுங்குவதில் சிரமம் ஆகியவை சாதாரணமாகக் காணப்படுகின்றன. இவை அவர்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகின்றன.

இத்தகைய நரம்பு நோய்களுக்கு தற்போது இசையின் மூலம் சிறந்த முன்னேற்றம் காணமுடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். பார்கின்சன் வியாதியில் நடுக்கம், ஆட்களைக்கண்டால் மிக அதிகமாக இருக்கும். இதனால் அவர்களுக்கு மனத்தளர்ச்சி ஏற்படும். இதனால் இவர்கள் பெரும்பாலும் வெளியில் செல்லவோ, நண்பர்,உறவினர்களைச் சந்திக்கவோ விரும்பமாட்டார்கள். வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடப்பார்கள்.  இசைப்பயிற்சியை ஆரம்பித்த பார்கின்சன்,மல்டிபிள் ஸ்க்ளெரோசிஸ்,ஸ்ட்ரோக் நோயாளிகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். அவர்கள் சிரத்தையான பயிற்சி மூலம் இசை நிகழ்ச்சி நடத்தும் அளவு முன்னேற்றம் கண்டுள்ளனர். பாடுவது மிகச்சிறந்த குரல் வளைப் பயிற்சியாக உள்ளதால் இது அவர்களின் பாதிப்படைந்த குரலை சீர் செய்துள்ளது. மேலும் உற்சாகத்துடன் பிறருடன் சேர்ந்துபாடுவது அவகளின் மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் பாடுவது நுரையீரல்களுக்கு மிகச்சிறந்த விரிந்து  சுருங்கும் திறனை அளிக்கின்றது.மேலும் சங்கீதம் கற்பதால் மூளையில் புதிய பாதைகள்,நரம்பு இணைப்புகள் உருவாகின்றன. ஸ்ட்ரோக்கால் கைகால் செயலிழந்தவர்கள் பியானோ,மிருதங்கம்,மேளம்,டிரம்ஸ் ஆகியவை கற்பதன்மூலம் விரைவில் நலம் கிடைக்கும்.

இப்படி சங்கீதத்தின் மூலம் மூளைஅழிவுநோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை Neurologic Music Therapy (NMT) என்று அழைக்கிறார்கள். இந்த சிகிச்சை முறையால் பார்கின்சனை குணப்படுத்தமுடியாது. ஆனால் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் நோயாளியை பயிற்சியின் மூலம் எல்லோருடனும் பழகவும்,தன்னம்பிக்கை அளிக்கவும் முடியும். வாழ்வில் நம்பிக்கை இழந்து வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் நோயாளிகளுக்கு இதுவே பெரிய விசயம்தான்.

நீங்களோ, நானோ இந்த வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடித்தால் கட்டாயம் நோபல் பரிசுதான்.

என்னுடைய ஆண்கள் அமுதூட்டமுடியுமா? இடுகை யூத்விகடனில் வந்துள்ளது.யூத்விகடனுக்கு நன்றி.

தலையணை மந்திரங்கள் 16 க்கு தமிலிஷில் 26 ஓட்டுக்களும் 618 ஹிட்டும் அளித்துள்ளீர்கள். நல்ல பதிவுகளுக்கு மக்கள் தரும் ஆதரவு மீண்டும் நல்ல இடுகைகளை எழுதத் தூண்டுகிறது.( அதுக்காக மொக்கை போடமாட்டேன் என்று அர்த்தமில்லை! இஃகி! இஃகி! இஃகி..)

இந்த செய்திகளை அனைவரும் படிக்க தமிழ்மணம், தமிலிஷில் ஓட்டுப்போடவும்!!

Tuesday 2 June 2009

தலையணை மந்திரங்கள்-16 !!

உலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சேர்ந்து இருக்கும் நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆதரவாக இருக்க வேண்டியது மிக அவசியம். 

கணவனும் மனைவியும் மனம் ஒத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதலும் அரிதாகிவருகிறது! சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் புரிதலின்மைகள் வளர்ந்து பூதங்களாகி இருவருக்கிடையில் ஒத்துப்போகாத நிலையில் போய் முடிகிறது.

இந்த நிலைக்கு பல காரணிகள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமான அன்பை சொல்லத்தெரியாததுதான். நான் உன்னைக் காதலிக்கிறேன், உன் மீது அன்பாக இருக்கிறேன் என்று நாம் தினமும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஆயினும் அவற்றைச் சொல்ல சின்னச்சின்ன வழிகளை நாம் கையாள வேண்டும்!!எல்லாம் தெரிந்ததுதான் புதிதா என்ன இதெல்லாம்? என்று அலுப்புப் படாமல் புத்துணர்ச்சியுடன் இவற்றைக் கடைப்பிடித்தால் விளைவுகள் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்!

1.உங்களுக்கு கணவனிடம்/காதலனிடம் கேட்க நிறைய கேள்விகள் சந்தேகங்கள் இருக்கும். தயங்க வேண்டாம் நேரடியாகக் கேட்டுவிடுங்கள்.ஆரம்பத்திலேயே நேரடியாகக் கேட்பது மிக நல்லது.நேரடியாகக் கேட்டு பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடுங்கள்.

2.உங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள். எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை. இன்னும் 10 வருடம் கழித்து எப்படியிருக்கும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் எண்ணங்களைக்கூறுங்கள்! கணவனின் கருத்தையும் கேளுங்கள். இருவரும் சேர்ந்து அந்த இலக்கு நோக்கி நகரும்போது வாழ்க்கை இன்பமான சுமையாக இருக்கும்.

3.வீட்டில் கணவனை மகாராஜா போல் நடத்துங்கள். வெளியில் அவர் சாதாரண வேலையில் இருக்கலாம் புகழ் அற்றவராக இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு அவர்தான் ராஜா என்று அவர் உணரவேண்டும்(வீட்டு நிர்வாகத்தில் நீங்கதான் முடிவெடுப்பீங்க. ஆனால் அவரின் உத்தரவுப்படி நடப்பதுபோல ஒரு பாவ்லாதான் வேறென்ன!!)

4.வாக்குவாதங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நிறையப் பிரச்சினைகளைப் பற்றி வாக்குவாதங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். ஆண்கள் வெற்றிபெறவே விரும்புவர். வெற்றிபெற விடுங்கள். அந்தப் பெருமையை அவர்களுக்குக் கொடுங்கள். நிறைய வீடுகளில் வாக்குவாதங்களில் ஆண்கள் வெற்றிபெறுவார்கள். கொஞ்ச நாள் கழித்து செயல் என்று வரும்போது பெண்கள் இஷ்டப்படிதான் வேலை ஆகும். இதனை கண்கூடாக நாம் பார்க்கலாம்.

5. உங்கள் கணவனை வேறு ஆண்களுடன் ஒப்பிடவே வேண்டாம். உங்கள் அப்பாவுடனோ, சகோதரர்களுடனோ கூட ஒப்பிடவேண்டாம். ஒருவர் போல் மற்றவர் இல்லை. உங்கள் கணவரை அவருக்கே உரிய குணங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். சினிமா கதாநாயகர்கள் போலிகள். கணவர் உங்களின் சொந்த அசல் கதாநாயகன் என்பதை மறவாதீர்கள்!

6.கணவனை/காதலனைப் புரிந்து கொள்ளுங்கள். 24 மணிநேரமும் அவருடைய நிகழ்ச்சிகள் என்ன என்பதை கேட்டு அறியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அலுவலக பிரச்சினைகள்,அவர் நண்பர்களின் விபரங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். விரைவில் கணவனுடைய மிகச்சிறந்த நண்பனாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.

7.உங்கள் கணவரின் உடல் நலத்தை கவனியுங்கள். இரவில் படிக்கிறேன், படம் பார்க்கிறேன் என்று நடுஇரவுவரை விழிக்க அனுமதிக்காதீர்கள். நிறைய தூக்கம்,கட்டாய உடற்பயிற்சி, அடிக்கடி மருத்துவ ஆலோசனை என்ற முக்கியமான விசயங்களை கணவன்  அசிரத்தையாக இருந்தாலும் நீங்கள் மிகுந்த அக்கரையுடன் செய்யுங்கள்.

8.உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். கணவனின் வரவுக்குள் செலவு ! ஆடம்பரம் வேண்டாம்.கணவன் பாராட்டு உங்களுக்கு உண்டு என்று சொல்லவா வேண்டும்.

9.சொந்தத்திலோ நட்பிலோ கணவனை யாரும் இகழ்ந்துபேச அனுமதிக்க வேண்டாம். அவர் பக்கம் நியாயத்தை எடுத்துச்சொல்லி அவருடைய மரியாதையைக் கட்டாயம் காப்பாற்றுங்கள். கணவனுக்கு மதிப்பளிக்காத நபரோ,இடமோ ஒதுக்கித்தள்ளி விடுக்கள்.

10.உங்கள் மனம் கோணும்படி சில வார்த்தைகள் கணவன் என்றோ கூறி இருப்பார். பெரும்பாலும் அப்படிச்சொன்னதற்காக உண்மையில் உள்ளத்தில் பிற்பாடு வருத்தம் வந்திருக்கும். ஆனால் அதை நிறையப்பேர் சொல்லமாட்டார்கள். நீங்கள் வாக்குவாதம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதனை ஞாபகப்படுத்த வேண்டாம். மறந்து விடுங்கள்.

11.நிறைய பெண்கள் கணவன் தன் முகக்குறிப்பறிந்து நாம் கேட்காமலேயே எல்லாம் வாங்கித்தருவார், செய்வார் என்று எதிபார்க்கிறார்கள். எல்லா ஆண்களும் அப்படி புத்திசாலியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. புத்திசாலிப் பெண்கள் இதை எதிபார்க்காமல் நேரடியாக காரியத்துக்கு வந்துவிடுவார்கள். இது இது இப்படி வேண்டும் என்று முன்னமே சொல்லிவிடுவார்கள். அப்புறம் என்ன? கணவன்மார் அவற்றைச் செய்து முடிப்பதைத் தவிர வழி ஏது?

12.வீட்டை சந்தோசமான இடமாக வைத்திருங்கள். ”ஏண்டா வீட்டுக்கு வருகிறோம்” என்று கணவன் நொந்து போவதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியின் கூடாரமாக வீட்டை மாற்றுங்கள்.

13.கணவன் சில காகிதங்கள்,புத்தகங்கள் ஆகியவற்றை சேர்த்துவைத்திருக்கக் கூடும். அவை உங்களுக்கு உபயோகம் இல்லாதவையாகத்தோன்றும். ஆனால் அவற்றைத் துப்புறவு செய்கிறேன் என்று தூக்கி எறிந்துவிட வேண்டாம். துப்புறவு மட்டும் செய்யுங்கள். எல்லாவற்றையும் குழப்பி அடுக்கினால் வரும் சண்டை ஓய 2 நாள் ஆகும்.

14.உங்களுடைய சந்தோசங்களை, நகைச்சுவைகளை கணவனிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பியுங்கள். இது கணவனுக்கு உற்சாகத்தை அளிக்கும். குரங்கு தொப்பி கதைபோல் பகிரப்பட்ட சந்தோசமும் நகைச்சுவையும் இரண்டு மடங்காக திரும்பக்கிடைக்கும்.

15.உங்களைப் பற்றி நீங்களே ஒரு நல்ல அபிப்பிராயம் கொள்ளுங்கள்..  தன்னைப் பற்றியே வெறுப்பில் உள்ளோரைச் சுற்றி எப்படி மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் உங்களையே ரசிக்க ஆரம்பியுங்கள்.  தன்னை ரசிப்பவர்கள் இடம் ஒரு அதீத மகிழ்ச்சியும்,அவர்களைச் சுற்றியிருக்கும் இடம் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். உங்களை நீங்கள் காதலியுங்கள். உங்கள் கணவனைக் காதலிப்பது மிக எளிதாகிவிடும்.

16.கடைசியாக மிக முக்கியமானது. கணவன்தான் படுக்கை அறையில் விசயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பெண்கள் அமைதியாக இருப்பீர்கள். இது மிகவும் தவறு. ஈகோ உடைக்கப்பட வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு கௌரவம் பார்ப்பதில் அர்த்தமில்லை. இங்கு கட்டுடைப்பது நீங்களாகவே இருந்துவிட்டுப் போங்களேன். ஆரம்பித்தபின் நீ தான் ஆரம்பித்தாய் என்று யாரும் குற்றம் சொல்லப்போவதில்லை. தாண்டுங்கள் கூச்சத்தை!!!

நண்பர்களே! முடிந்தவரை சுருக்கமாக சொல்லமுயன்று உள்ளேன். இது பெண்களுக்காகக் கூறப்பட்டதாயினும் ஆண்களும் கடைப்பிடிக்க நிறைய இதில் உள்ளது.

பதிவு அனைவரையும் அடைய தமிழ்மணம்,தமிலிஷில் ஓட்டிடுங்கள்.

Saturday 30 May 2009

உதிர்ந்த மனம் !!

இடைவெளியின்

இருள் நீண்ட தடங்கள்

சுருங்கி

சூன்யத்தின் விளிம்பில்

நீங்களும் நானும்

சந்திக்கும் கணம்..

 

பிரதிவாதம் தாளாத,

தனிமையாய் இருளில்

புனையப்பட்ட வினாக்களால்

வெந்து உதிர்ந்தது

உமக்காக நான் கொணர்ந்த

ஒற்றை மலரும் !

Friday 29 May 2009

ஆண்களால் குழந்தைக்கு அமுதூட்ட முடியுமா?

மாறி வரும் அறிவியல் உலகம் ஆண் பெண் பாகுபாடுகளில் அதீத புரட்சிகளை செய்து வருகிறது. பெண்கள் தாங்கள் மட்டும் ஏன் குழந்தையைச் சுமக்கிறோம்? ஆண்களுக்கு சாதகமாக கடவுள் செயல்பட்டு விட்டார் என்று அலுத்துக் கொள்வதையும் நாம் பார்க்கிறோம்.

ஆண்கள் குழந்தைக்குப் பாலூட்ட முடியுமா? இந்த சிந்தனை நம்மில் பலருக்கு வந்திருக்காது.

அறிவியல் ரீதியாகப்பார்ப்போமா இதை. பால் சுரப்பதற்கு

1.மார்பகங்கள் தேவை. அந்த மார்பகங்களில் பால் சுரப்பிகள்(Mammary glands), சுரந்த பாலை கொண்டு செல்லும் குழாய்கள்(feeding ducts), மார்புக்காம்பு(Nipple) ஆகியவை தேவை. இவை பெண்களுக்கு முழு வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது.

2.பிட்யூட்டரி சுரப்பி(pituitary gland) இந்த பிட்யூட்டரி சுரப்பிதான் பாலை சுரக்கத்தூண்டுகிறது. இதுவும் ஆண் பெண் இருபாலருக்கும் இருக்கிறது.

பாலூட்டவேண்டுமென்றால் மார்பகங்களுக்குத் தூண்டுதல் தேவை. பெண்களுக்கு இது கர்ப்பத்தின் போதே ஏற்பட்டுவிடுகிறது. அப்படி தூண்டப்படும்போது மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி ப்ரொலாக்டின் என்ற ஹார்மோனை அதிக அளவில் சுரக்கிறது. அவைதான் மார்பகத்தில் பாலூறும் செயல்களை கவனிக்கின்றன.

ஆண்களுக்கு ப்ரொலாக்டின் குறைந்த அளவே சுரக்கும். உடல் உறவின் போது இவை வெளியிடப்படும் இவை திருப்தியையும், உடல் ரிலாக்ஸான நிலையையும் ஏற்படுத்துகின்றன.

ஆண்கள் பாலூட்டுவதுபற்றி நிறைய வரலாற்று சான்றுகள் உள்ளன.

1896 க்கு முன்பே கடல் மாலுமி குழந்தையின் தாயைப் பிரிந்த தன் குழந்தைக்கு பாலூட்டியதாகவும், ஒரு தென் அமெரிக்க உழவர் தன் மனைவி நோய்வாய்ப்பட்டிருந்தபோது பாலூட்டியதாகவும், சிப்பீவா(Chippewa) என்ற அமெரிக்க பழங்குடியின ஆண் தாய் இறந்த தன் குழந்தைக்கு குறைவில்லாமல் பாலூட்டியதாகவும் வரலாற்றில் காணப்படுகிறது.

 

மேலேயுள்ள படத்தில் உள்ள விஜெரட்னே (2002ல்)என்ற இலங்கைப் பிரஜை தன் மனைவி இறந்தவுடன் தன் குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். குழந்தைக்கு பால் மாவு ஒத்துக்கொள்ளாததால் வேறுவழியின்றி தன் மார்பைக் குழந்தை தேடியபோது கொடுத்ததாகவும் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் பால் சுரந்ததாகவும் கூறியுள்ளார்.

குழந்தையில்லாத பெண்கள் பலர் தத்தெடுத்த குழந்தைகளுக்கு திடீரென பாலூட்ட இயலும் சம்பவங்களுக்கும் இதுதான் காரணம்.

எல்லா ஆண்களுக்கும் ப்ரொலாக்டின் குறைந்த அளவே இருக்கும். அதீத தேவைகளில் மூளை இதனை அதிகம் சுரக்க வைக்கும்.

எல்லாம் நம் மூளையில்தான் உள்ளது!!

 

பதிவு பிடித்திருந்தால் தமிழ்மணம், தமிலிஷில் ஓட்டிடவும்!!

Wednesday 27 May 2009

கவிதை எழுதவேண்டும்!!

ஒவ்வொரு முறையும்

இவர்கள் என்னைக்

கவிதை எழுதச்சொல்கிறார்கள்!!

 

இவர்கள் வர்ணம் பூசிய

என் கனவுகளைக்

கடைகளில் விற்பவர்கள்!

 

தலைப்போ,

கருவோ,

அவர்களின் விருப்பங்கள்-

மேசையெங்கும்

சிதறிக்கிடக்கின்றன!

 

என் பசிக்கான உணவு

நானிருக்கும் அறை,

அமர்ந்திருக்கும் நாற்காலி

எல்லாம் அவர்களே

தீர்மானிக்கிறார்கள்!

 

ஒத்துப்போகா சொற்களை

வலியப் புணரச்செய்து

எழுதப் படும்

ஒவ்வொரு வரியும்

அவர்களுக்காகவே

எழுதப்பட்டது!!

 

அங்கும் இங்கும்

திருத்தங்கள் சொல்லி

என் கவிதையில்

அவர்களின் முகங்களைத்

திணித்தார்கள்!!

 

ஒவ்வொரு முறையும்

அவர்களின்

கருத்துக்களுக்கு

நான் சேர்த்த வசீகரமான

சொற்கள் வலிமிகுந்த

ஒரு குறைப்பிரசவமாகவே

முடிகின்றன..

 

ஆயினும் அவர்களுக்கான

என் படைப்பை

உச்சிமோந்து

கொண்டாடுகிறார்கள்!

 

எழுதி முடித்த

பக்கங்களில் தேடுகிறேன்,

என் கவிதையும் நானும்

அங்கு இல்லை!

 

கொஞ்சம் பொறுங்கள்!!

அவர்கள் வருகிறார்கள்

நான் கவிதை எழுதவேண்டும்.

Tuesday 26 May 2009

மனித தோல் சிற்பங்கள்!-தடை செய்ய வேண்டும்!!

 

அன்பு நண்பர்களே!

மேலேயுள்ள அமெரிக்கக் கொடி எதனால் செய்யப்பட்டிருக்கிறது தெரியுமா? தோலால்! அதுவும் மனிதத்தோலால்! கேட்கவே அதிர்ச்சியாக உள்ளதுதானே!!

Andrew Krasnow ஆன்ட்ரூ க்ராஸ்னோ என்ற அமெரிக்கக் கலைஞர்தான் இதைச் செய்தவர்.கடந்த 20 வருடங்களாக அவர் இறந்த தானம் செய்யப்பட்ட உடல்களிலிருந்து எடுக்கப்பட்ட தோல்களினால் அமெரிக்கக்கொடி,அமெரிக்க வரைபடம்,காலணி போன்ற தோல் வடிவங்களைச் செய்துவருகிறார்.

மனிதத்தோலினால் லாம்ப் ஷேட் வரிசை படைப்புகள் நாசிக்களின் கொடுமையில் முகாம்களில் கொலைசெய்யப்படவர்களை பிரதிபலிப்பதாக செய்துள்ளார்.

இதனை அமெரிக்காவின் உலகளாவிய போர் அடக்குமுறையை எதிர்த்து அவருடைய பதிவாக அவர் கருதுவதாகக் கூறுகிறார்!

இவருடைய படைப்புகளை பார்வைக்கு வைக்க இங்கிலாந்து அரசின் மனித திசுப் பிரிவு ஒப்புதல் அளித்துள்ளது!

உலக அளவில் கலை ஆர்வலர்கள் மனிதத்தோலை உபயோகிப்பதைக் கண்டனம் செய்துள்ளனர்.

மனிததோலால் கலைப்பொருள் செய்வது தவறு என்பது என் கருத்து, அது எத்தகைய காரணத்துக்காக இருந்தாலும்! ஏன் என்று கேட்கிறீர்களா?சற்று தீவிரமாக சிந்திப்போமானால் இதன் பின் விளைவுகள் கொடூரமாக இருப்பது தெரிய வரும்.

இன்று மனிதத்தோலால் செய்யும் இவர்கள் நாளை மனிதனின் வேறு உறுப்புகளையும் உபயோகிப்பார்கள்! தோலை அனுமதிக்கும் அரசு ஏன் உறுப்புக்களை அனுமதிக்கக்கூடாது என்று கேட்பர். இறந்த மனிதனின் தோல் கிடைக்காத பட்சத்தில் வேறு ஆபத்தான வழிகளுக்குச் செல்லும் வாய்ப்புகள்,இதற்கென ஏஜெண்டுகள் என்று ஒரு பெரிய சந்தையே உருவாகும். நிழல் உலகில் இந்தப் பொருட்கள் விற்பனையும் செய்ய ஆரம்பித்தால் அவ்வளவுதான்!!

விலங்குகள் போல எளிய மனிதர்களும் வெளியே தெரியாமல் வேட்டையாடப்படுவார்கள்!! இந்த விசயங்களை நீதித்துறை நீதிபதிகளும்,அரசு சட்ட வல்லுனர்களும் கவனத்தில் கொண்டு இதனை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும் என்பதே என் கருத்து!

இதையும் இங்கிலாந்து அரசு எப்படி அனுமதித்தது என்பது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது!

உங்களின் கருத்துக்களையும் பதியுங்கள் நண்பர்களே!!

பதிவு பிடித்திருந்தால் தமிலிஷிலும் தமிழ்மணத்திலும் போடுங்க ஓட்டு!!

Monday 25 May 2009

மதுரையில் பாசக்கார பதிவர்கள்!!

அன்பின் வலை நண்பர்களே!!

மதுரையிலே பதிவர் கூட்டம் ஞாயிறு நேற்று நடந்தது. இப்பொழுதுதான் திருச்சியில் முடிந்த சந்திப்பு இன்னும் நினைவுகளை விட்டு நீங்காதிருக்கும்போதே அடுத்த சந்திப்பு.

என்னுடைய வேலைப் பளு என்னமோ நேற்று மிக அதிகம்!! காலையில் 6.00மணிக்கு ஒரு அறுவை சிகிச்சை! 10மணிக்கு என் நண்பர் டாக்டர் மணிராஜின் புதல்வி பூப்புனித விழா, திருச்சி சங்கீதா ஓட்டலில் மதிய சாப்பாடு!! முடித்து காரைக்குடி திரும்புகையில் நண்பரின் கார் மக்கர். காரை ஷெட்டில் விட்டு நண்பருடன் என் காரில் மதுரை சந்திப்பு!!! அதனால் கொஞ்சம் தாமதந்தான்!!!

சந்திப்பில் 14+2 பதிவர்கள் கலந்து கொண்டனர்!! 

1. டக்ளஸ்
2.தேனீ-சுந்தர்
3. அன்பு- சிவகாசி
4. பாலகுமார்
5. இளைய கவி கணேஷ் குமார்
6. ஜாலி ஜம்பர்
7. சூப்பர் சுப்ரா
8. வால்பையன்
9. கார்த்திகைப் பாண்டியன்
10. ஸ்ரீதர்
11. சில் பீர்
12. டாக். தேவமாயம்
13. அருண்
15. சீனா
14. தருமி
15. ராஜா
16. கார்த்திக்

இளைய கவியை நான் எதிபார்க்கவில்லை!! வந்திருந்தார்.

இருள் கவ்விய நேரத்தில் முன் முகம் தெரியா நண்பர்கள் நமக்காக ஆர்வத்துடன் அன்புக்கதைபேச காதலியிடம் பேசுவதைவிட இனிமையாக இருந்தது அந்த மாலை!

அறியா நண்பர்கள் நம் மீது அன்பு காட்ட சொல்ல முடியாத பாசமும், பற்றும் கரை புரண்டோடும் இந்த சந்திப்புகளை நான் சொன்னால் நீங்கள் உணரமுடியாது!

வணிக மயமான இந்த உலகில் புதிய நண்பர்கள் ஏற்படுவது அபூர்வம்! அதுவும் கவிதை கதை ,பதிவுலகம் ஏதும் அறியா இயந்திர மனிதர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும் நாம்! இத்தனை மாதம் பதிவெழுதி ஒரு காரைக்குடி பதிவர்கூட என்னால் கண்டுபிடிக்கவில்லை!!

ஆனால் எங்கோ கனடாவில் இருக்கும் ”பழமைபேசியார்” என்னைத்தொடர்பு கொண்டு திருச்சி பதிவில் என் காணொளியைக்கண்டு உளம் பூரித்து தொலைபேசியில் அளவளாவியபோது......நான் அடைந்த இன்பம் ....வார்த்தைகளில் வராதது!! நான் பேசிய பேச்சில் என்னையும் அறியாமல் வந்த என் காரைக்குடி மண்ணின் தமிழ் அவரைக்கவர்ந்ததாம்!! அன்பு வலை நண்பர்களே நீங்கள் காட்டும் பாசம் அளவில்லாதது!!....அதற்கு நான் தலை வணங்குகிறேன்!!

பாசக்கார மக்களின் படங்களையும் பாருங்களேன்!!maduraibloggermeet 24-5-2009 001 maduraibloggermeet 24-5-2009 002 maduraibloggermeet 24-5-2009 003 maduraibloggermeet 24-5-2009 004திரு.சீனா. maduraibloggermeet 24-5-2009 005 maduraibloggermeet 24-5-2009 006 maduraibloggermeet 24-5-2009 007 maduraibloggermeet 24-5-2009 008 maduraibloggermeet 24-5-2009 009அன்பின் தருமி!! maduraibloggermeet 24-5-2009 010


வால்பையன், சூப்பர் சுப்ரா, அருண்

தேனீ-சுந்தர், கார்த்திக், சில்-பீர்

அருண், தேனீ-சுந்தர், சில்-பீர்

கணேஷ் குமார்


ஸ்ரீதர், வால்பையன்

டக்ளஸ்

ஸ்ரீதர்


சூப்பர் சுப்ரா, அன்பு, ஜாலி, ஸ்ரீதர்

அன்பு, கார்த்திக்

சில்-பீர்

ஸ்ரீதர், கணேஷ் குமார், வால்ஸ், ராஜா

ஸ்ரீதர், கணேஷ் குமார், வால்ஸ், ராஜா, சில்-பீர்

அன்பு, கார்த்திகை

ஜாலி, ஸ்ரீதர், கார்த்திகை


பாசக்கார மக்களின் படங்களைப்பார்த்தீர்கள்!

போடுங்க ஓட்டு தமிலிஷிலும், தமிழ்மணத்திலும்!!

தேவா...

Friday 22 May 2009

தாவணி

---------------------------------------------------

நண்பர்களே!! ஒரே அரசியல்,தேர்தல்

என்று ரொம்ப வறட்சியில்

பதிவுலகம்! சூடு தனிய மொக்கையா

ஒரு கவிதை! படித்து விட்டு ....

----------------------------------------------------

ன்னதான் மறைத்தாலும்

தாவணியின் பூக்களெல்லாம்

சொல்லுதே உன் காதலை!!

 

என்னிடம் காதலைச்

சொல்லத்துடிக்கும்

உன் மனதை

மறைக்கமுடியுமா.

தாவணிக்குள்!!

 

என்னைக்

கண்டவுடன்

வெட்கப்பட்டு ஒதுங்குகிறது

உன் தாவணியும்!!

 

4.உன் தாவணி ஓடும்

பால்வீதியில் மட்டும்

எப்படி

இரு நிலவுகள்?

 

எங்கிருந்து ஆரம்பித்தது

உன் தாவணி!

இடையின் முன்னிருந்தா

இல்லை

பின்னிருந்தா?

 

நெஞ்சில் எழுந்து

தோளில் தவழ்ந்து

முதுகில் விழும்

நீர்வீழ்ச்சி உன்

தாவணி!!

 

உன் வாசனையில்

கிறங்கிக்கிடக்கிறோம்

நானும்

உன் தாவணியும்!

 

ஒரு சந்தர்ப்பம் கொடு

உன் தாவணிபோல்

நானும் ஒரு

8 பொடுகிறேன்

உன் இடுப்பிலிருந்து

தொடங்கி !!!

 

தாவணி பிடித்திருந்தால் போடுங்க ஒட்டு தமிலிஷ்,தமிழ்மணத்தில்!!

Thursday 21 May 2009

பதிவர் சந்திப்பு மதுரை!!

அன்பு வலை மக்களே!

நம்ம ஊரு காரைக்குடி! சுத்தி சுத்தி பதிவர் சந்திப்பு! போவலைன்னா என்னா இவன்னு நீங்க கோவிப்பீங்க! முடிந்தால் போய் விடுவதுதானே நல்லது!!

திருச்சி சந்திப்பு மிக சந்தோசமாக இருந்தது. பதிவெல்லாம் பார்த்து இருப்பீங்க..

இப்போ மதுரையில் சந்திப்பு!! மதுரையில் நிறைய மூத்த பதிவர்கள் உண்டு!! அனைவரும் வந்து புதிய பதிவினருக்கு தங்கள் அனுபவங்களைச் சொன்னால் நன்றாக இருக்கும்!

அந்த ஆர்வத்த்துடன் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை பதிவர் சந்திப்புக்கு செல்கிறேன். பின்வரும் நண்பர்கள் எல்லாம் தாங்கள் சந்திப்புக்கு வருவதை உறுதி செய்து உள்ளார்கள்.

தருமி ஐயா...

cheena (சீனா) ஐயா..

வால்பையன்.............

டக்ளஸ்...

சில் பீர்..

சுந்தர்..

கார்த்திகை பாண்டியன் 

தேவா ஆகிய நான்!

முகம் தெரியாத நண்பர்கள் சில் பீர், டக்ளஸ், சுந்தர்,வால் ..... கலந்துகொள்கிறார்கள்!!

போன திருச்சி சந்திப்பு அன்று பொதுத்தேர்தல் என்பதால் கடையடைப்பு!! ஆகையால் ரொம்ப அமைதியா இருந்தது!!! இந்த ஞாயிற்றுக்கிழமை மதுரை நகரமே கோலாகலமாக இருக்கும்!!

நாள் : 24 - 05 -2009 - ஞாயிற்றுக்கிழமை.

நேரம் : மாலை 5 மணி

இடம் : ஈக்கோ பார்க் - காந்தி ம்யூசியம் அருகில்.

மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நண்பர்கள் எல்லாரும் கண்டிப்பா வந்து கலந்துக்குங்க. பதிவுகளை படிக்க மட்டுமே செய்றவங்களா இருந்தாலும் வாங்க. கண்டிப்பான முறையில் இது ஒரு நல்ல அனுபவமா இருக்கும்னு நம்புகிறோம். சந்திப்பு பற்றிய சந்தேகங்கள் இருந்தா தொடர்புக்கு...

தருமி ஐயா - 99521 16112

சீனா ஐயா - 98406 24293

மா. கார்த்திகைப் பாண்டியன் - 98421 71138

தேவா @ தேவன்மாயம்- 97512 99554..

ஓட்டைக்குத்துங்க!!

சிறு மாற்றம்:

இடம் : ஈக்கோ பார்க் - மாநகராட்சி அருகில். அன்று ஞாயிறு மாலையாவதால் மிகுந்த கூட்டம் இருக்கும் காரணத்தால், நம் பந்தயத்திடலில் - அதாவது, தமிழில், ரேஸ் கோர்ஸ்ஸில் - நம் சந்திப்பை வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Tuesday 19 May 2009

எழுந்து வா பிரபாகரா!! நீ இறக்கவில்லை!!

 

பிரபாகரா!!

திறமயுள்ளோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பர்.

அது போல் சென்ற நாட்டிலெல்லாம் தான் சிறந்ததோடு அல்லாமல் அந்நாட்டில் உள்ளோர் அனைவரையும் வாழ வைக்கும் உலகின் மிகச்சிறந்த தமிழ்க்குடியின் தன்னிகரற்ற தலைமகனே!!

புத்தியிலும் சக்தியிலும் யுக்தியிலும் யாருண்டு உனக்கு நிகர் இங்கே!! பஞ்சணையிலும்,பட்டாடைகளிலும் புரளும் வாய்ப்புகள் கோடி இருந்தும் காடுகளிலும் மலைகளிலும் கண்ணுறங்காமல் அலைந்த மாவீரனே!!

முப்பதுக்கும் மேற்பட்ட வருடங்கள் தமிழ் இனத்துக்காக நீ அடைந்த இன்னலை எந்தத் தமிழ் நெஞ்சமும் மறக்காது!

இருக்கிறாரா? எம் தலைவர் உயிருடன் என்று கதறும் எங்கள் குரல் உன்னை அடைகிறதா!!

நீ இறந்திருக்க முடியாது!! எத்தனை துரோகிகள் காட்டிக்கொடுத்தாலும் விண்ணை யாரும் தொட்டுவிட முடியாது!!

எத்தனை புல்லுருவிகள் உன்தடம் சொன்னாலும் சூரியனே!! உன்னை யாரும் சுட்டுவிட முடியாது!!

உன் புகழ் எழுத எவரிடமும் சொற்கள் இல்லை!! உலக மொழிகளெல்லாம் போதாது உன் சரித்திரம் எழுத!!

நீ சுவாசித்த காற்றை சுவாசிக்கக்கூட இங்கு யாருக்கும் அருகதை இல்லை!!

பொய்யான உடல் சுமந்து, சிறுநெஞ்சில் வஞ்சம் சுமந்து வாழும் கயவர்கள் உனக்கு ஈடா?

பிரபாகரா!! நீ இறக்க மாட்டாய் !! நாடு விட்டு நாடு ஓடி நாதியற்றுக் கதறும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் நீ உயிருடனிருப்பாய்!!

பிரபாகரா!! நீ இறக்க மாட்டாய்!! வீடிழந்து, உறவிழந்து ஈழத்தில் துயரப்படும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் நீ உயிருடனிருப்பாய்!!

பிரபாகரா!! நீ இறக்க மாட்டாய்!! தாயிழந்து, தந்தையற்று பயத்தாலும் பசியாலும் துடிக்கும் ஒவ்வொரு தமிழ்ப் பிஞ்சுகளுக்காகவும் நீ உயிருடன் இருப்பாய்!!

எழுந்து வா பிரபாகரா!!!

உன்னைக் காணாது துடிக்கிறோம்!!

உன்னை யாரும் கொல்ல முடியாது !!

எழுந்து வா பிரபாகரா!!!

Saturday 16 May 2009

தேர்தல் முடிவுகள்- சாட்டையடி-2 !!

இந்தத் தேர்தலின் முன் நடந்த கூத்துகளை நேரடியாகப் பார்த்துவிட்டு சும்மாதான் இருந்தேன். ஆயினும் எனக்குத்தோன்றிய சில விசயங்களை எழுதினால் என்ன என்று தோன்றியதால் எழுதுகிறேன். யார் மனதாவது புண்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள்!

1.மாயாவதி ஆட்சிக்கு வந்தபின் மிகவும் மகிழ்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன். அரசியல் வாழ்வில் தன்னிகரற்று விளங்கிய கன்ஷிராமின் வாரிசாக மாயாவதி அரசியலுக்கு வந்தார்.1995ம் ஆண்டு சாதீய பிடிப்புகள் அதிகம் உள்ள உ.பி.யின் முதல்வர் அரியணையில் மாயாவதி அமர்ந்தார்..இந்தியாவிலேயே ஒரு மாநில முதல்வரான முதல் தலித் இவர்தான். அதோடு மட்டுமில்லை... மிக இளம் வயதில் இந்தியாவில் முதல்வரானவரும் மாயாவதிதான். முதல்வர் நாற்காலியில் அமர்ந்தபோது அவருக்கு வயது 39.

தற்போது?..... கட்சியில் அடிப்படை உறுப்பினர்களுக்கு எந்த பயனும் முன்னுரிமையும் இல்லை!! பிற கட்சிகளைப்போல் தொழில் அதிபர்கள், பணக்காரர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது!! தலீத்துகளுக்கு செய்யவேண்டியது நிறைய இருக்கும் போதே அதை விடுத்து பிரதமராகும் கனவில் தன் கட்சியை தேசிய அளவில் பிரபலப்படுத்த முயன்றார். தலீத்துகளுக்கு எதிரான அமைப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜாதி வெறியர்கள் கூட அவர் கட்சியில் பொறுப்புகளை ஏற்றதுதான் மிகக்கொடுமை.

மாயாவதியின் தமிழக வருகையும் தலித் ஓட்டுக்களைப் பிரிக்கவே உதவும்..

2.உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் மொத்தம் 120 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் அதிக தொகுதிகளை கைப்பற்றி இந்தியஅரசியலில் ஆட்சியைக்கூட்டணியாக வெல்லலாம் என்று மனப்பால் குடித்தனர்.

காங்கிரசை கழற்றி விட்டு விட்டு லோக் ஜன சக்தி தலைவர் பஸ்வானை சேர்த்துக் கொண்டு 4-வது அணியை தொடங்கினார்கள்.

பீகாரில் லல்லு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி 22 இடங்களில் 2004ல் வெற்றிபெற்றது.

இந்தத்தேர்தலில் கடைசி நேரத்தில் செய்த குழப்படியால் தோல்விமுகம் கண்டு நொந்து போயிருக்கிறார் லாலு.

அதைத் தற்போது தான் செய்த தவறு என்றும் ஒப்புக்கொள்கிறார்.

தேர்தலில் பிரதமராகலாம் என்று ஆசைப்பட்ட அனைவரும் மண்ணைக்கவ்வியுள்ளனர் இந்தத்தேர்தலில்!

அதே சமயம் பிரதமராக தானோ,தன் மகனோ பதவியேற்க முடியும் என்ற நிலையிலும் பிரதமர் மன்மோஹன் சிங்க்தான் என்று கூறியிருக்கும் காங்கிரஸ் தலைவரையும் பிரதமர் பதவியாசை பிடித்து அலைந்த இவர்களையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்க என் மனம் ஒப்பவில்லை!!! இந்திய மக்களும் அப்படித்தான்.

இதையே இந்ததேர்தல் தெளிவாக உணர்த்தியுள்ளது!

பதிவு பிடித்தால் தமிழ்மணம்,தமிலிஷில் ஓட்டிடுக.

தேர்தல் முடிவுகள்!! சாட்டையடி!!

தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன! நான் எதிர்பார்த்தது போலவே இருந்தது முடிவுகள்!!

1. சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் கட்சிகள் வெளியேற்றப்பட்டு உள்ளது இந்தத்தேர்தலின் சிறப்பு. நான் எதிர்பார்த்தபடியே மருத்துவர் கட்சி எல்லா இடங்களிலும் தோல்வி!! இந்த முறை அவர் கணக்கு தப்பிவிட்டது..இந்த முடிவு சந்தர்ப்ப அரசியல் செய்யும் கட்சிகளுக்கு ஒரு பாடம்!!

2.ஆளும் பெரும்தலைகள் குறைந்த வித்தியாசத்தில் இழுபறி! பணம் இரண்டு பக்கமும் விளையாடியதில் மக்களுக்கு குழப்பம்.

ப.சிதம்பரம் தோற்பார் என்று எண்ணினர். ஆனாலும் எதிர் வேட்பாளரின் வேகம் மற்றும் இன்ன பிற சங்கதிகள் சிதம்பரத்துக்கு சரியான சவாலாக இருந்தன! கடைசிவரை தொடர்ந்த தோல்வி செய்திகள் கடைசியில் மாறிவிட்டன!! மறுவாக்கு எண்ணிக்கை கோரினார் கண்ணப்பன்!! கடைசியில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிப்பு!!

ப.சிதம்பரம் தொகுதியை மறு ஆய்வு செய்து செய்யவேண்டியவைகளை தொகுதிக்கு செய்யவேண்டும்.

3.வைகோ எதிர்பார்த்தது போல் தோல்வி!! அவரே இதைத்தான் எதிர்பார்த்து இருப்பார். கூண்டுச் சிங்கம் கர்சித்ததை யாரும் ரசிக்கவில்லை!!  

4.சிதம்பரத்தில் திருமா வெற்றி! சிறு வித்தியாசத்தில் தோற்பார் என்று எதிர்பார்த்தேன். கடைசிவரை கூட்டணி மாறாமல் இருந்ததற்கு கிடைத்த பரிசு!!திருமாவுக்கு என்ன அமைச்சர் பதவி!! அன்புமணி இடம் கிட்டுமா?

5.மணிசங்கர்- புத்திசாலி வேட்பாளர். ஒருமுறை பெட்ரோலியம் சம்பந்தமாக வெளிநாடுகளில் அவர் பேசிய பேச்சு எல்லோராலும் பாராட்டப்பட்டது. எங்கே போனாலும் தொகுதியை சரியாக கவனிக்கவில்லை என்று பேசப்படுகிறது!! அதுதான் தோல்வியின் காரணமா?

6.ஈழத்தமிழர் பிரச்சினையில் நம் அரசியல்வாதிகளின் கூத்துக்கள் தேர்தலில் பிரதிபலித்தாற்போல் தெரியவில்லை.அப்படியே இருந்தாலும் படித்தவர்கள் மத்தியில் இருந்ததுபோல் தீவிரமான தாக்கம் அவர்களிடம் இல்லை என்றே நினைக்கிறேன். இதனாலேயே அறிவுசார் வாக்காளர்களின் எதிபர்ப்புகளுக்கு ஏற்ற முடிவுகள் பலசமயங்களில் வெகுஜன அரசியலில் கிடைப்பதில்லை.

மேலும் தீவிரமான அலைகள் எதுவும் வீசவில்லை இந்தத்தேர்தலில்... திடீர் தேர்தல் அறிக்கைகளும் ஸ்டண்டுகளும் பொய்த்துப்போனது தேர்தல் முடிவுகளில் தெரிகிறது!!

Thursday 14 May 2009

திருச்சி பதிவர் சந்திப்பு-படங்கள்!!

பத்துவருடம் பழகுவதும் ஒன்னுதான் ஒரு பதிவர் சந்திப்பு போவதும் ஒன்னுதான்!!

clip_image001அவ்வளவு நெருக்கம் ஏற்படுதுங்க. பொய்யில்லை. உண்மை!!

clip_image002ஓரளவு சிந்தனை ஒரே மாதிரி இருப்பது காரணமா !! ஆமா அதுதான் காரணமாக இருக்கும்!!

அகநாழிகை: பொறுப்பான அப்பா மாதிரி தோற்றம்! ப்ளாக் படங்களப் பார்த்ததை விட இளமையா இருக்காரு. clip_image003 முக்கா டவுசருதான் போடுவாரம்!!!!போட்டிருந்தார். ரொம்பநாளா பத்திரிக்கைகளில் எழுதுறாராம். பத்திரிக்கை அரசியல் பற்றியும் நல்லா பேசினார்.

கார்த்திகை பாண்டியன்: clip_image004 கவர்ச்சியா இருக்கார். துடிப்பான இளைஞர். கண்களில் ஆர்வமும் அன்பும்... clip_image005ஆஹா எந்த மகராசி கொடுத்துவைத்தாளோ? விண்ணப்பங்கள் ஏற்கப்படும்! ஆமாங்க.இன்னும் கால்கட்டு இல்லை. பலகுரல் மன்னன்!!! அப்படியே விஜயகாந்தை வைச்சு ஒரு சின்ன நிகழ்ச்சியே நடத்தீட்டார்.

இளங்கவி: காராசாரமான பேச்சு, நிறைய டெக்னிக்கலாக ப்ளாக் பற்றிப் பேசினார். clip_image006 புதுத் திரட்டி போன்றவற்றில் ரொம்ப ஆர்வம்..அவரோடு பேசினீங்க நேரம் போவதே தெரியாது. கைவசம் நிறையக்கதை வச்சிருக்கார்..வம்பு தும்புக்குப் போகாத!!.... நல்ல தம்பி!!!

சொல்லரசன்: அமைதி..அமைதி.. அமைதி.. இவர் நோ டென்ஷன் பார்ட்டி!! clip_image007 திருப்பூர் பனியன் எக்ஸ்போர்ட்டில் உள்ள லஞ்சம் வாங்காத ஒரே நேர்மையாளர்..நல்லா ரொம்ப ஈஸியா பழகினார்.

clip_image008ஞான்சேகரன். சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தார். தரைப்படை,கப்பற்படை எல்லாம் முடித்து விமானப்படை விமானக்கட்டுமானத்தில் இருக்கிறார். இவ்வளவு இருந்தும் அடக்கமாக இருக்கிறார். இவருக்கும் ,கமலுக்கும் தோதாகத்தான் இந்தப்பதிவர் சந்திப்பு...

clip_image009சொல்லரசன்: அமைதி..அமைதி.. அமைதி.. இவர் நோ டென்ஷன் பார்ட்டி!! திருப்பூர் பனியன் எக்ஸ்போர்ட்டில் உள்ள லஞ்சம் வாங்காத ஒரே நேர்மையாளர்..நல்லா ரொம்ப ஈஸியா பழகினார்.

ஞான்சேகரன். சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தார். clip_image010 தரைப்படை,கப்பற்படை எல்லாம் முடித்து விமானப்படை விமானக்கட்டுமானத்தில் இருக்கிறார். clip_image011 இவ்வளவு இருந்தும் அடக்கமாக இருக்கிறார். இவருக்கும் ,கமலுக்கும் தோதாகத்தான் இந்தப்பதிவர் சந்திப்பு..

மெல்போர்ன் கமல்: ஆஸ்திரேலிய வானொலி பகுதிநேர

அறிவிப்பாளர். clip_image012” கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” என்று

கல்யாணத்துக்கு வந்திருந்தார்.. ரொம்ப சாஃப்ட். மிகுந்த ஆர்வத்துடன்

இருந்தார்..

clip_image013அகநாழிகை:இள பின்க் நிற சட்டை,முக்கா பேண்ட்

மெல்போர்ன் கமல்:வெள்ளை ப்ளையின் சட்டை.

சொல்லரசன்:சந்தன சட்டை.

ஞானசேகரன்:கருஞ்சிவப்பு சட்டை

இளைய கவி:கண்ணாடி அணிந்திருப்பவர்!

கார்த்திகை பாண்டியன்:நீல பச்சைக் கோடுபோட்ட வெள்ளை பனியன்!

clip_image014படங்களை சுருக்கித்தந்துள்ளேன்!! மிச்சபடி படங்கள் அதனதன் இடத்தை அவையே தேர்ந்தெடுத்துக்கொண்டன!!! என் கண்ட்ரோலில் அவை இல்லை!!!