Saturday 30 May 2009

உதிர்ந்த மனம் !!

இடைவெளியின்

இருள் நீண்ட தடங்கள்

சுருங்கி

சூன்யத்தின் விளிம்பில்

நீங்களும் நானும்

சந்திக்கும் கணம்..

 

பிரதிவாதம் தாளாத,

தனிமையாய் இருளில்

புனையப்பட்ட வினாக்களால்

வெந்து உதிர்ந்தது

உமக்காக நான் கொணர்ந்த

ஒற்றை மலரும் !

No comments:

Post a Comment