Thursday 21 May 2009

பதிவர் சந்திப்பு மதுரை!!

அன்பு வலை மக்களே!

நம்ம ஊரு காரைக்குடி! சுத்தி சுத்தி பதிவர் சந்திப்பு! போவலைன்னா என்னா இவன்னு நீங்க கோவிப்பீங்க! முடிந்தால் போய் விடுவதுதானே நல்லது!!

திருச்சி சந்திப்பு மிக சந்தோசமாக இருந்தது. பதிவெல்லாம் பார்த்து இருப்பீங்க..

இப்போ மதுரையில் சந்திப்பு!! மதுரையில் நிறைய மூத்த பதிவர்கள் உண்டு!! அனைவரும் வந்து புதிய பதிவினருக்கு தங்கள் அனுபவங்களைச் சொன்னால் நன்றாக இருக்கும்!

அந்த ஆர்வத்த்துடன் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை பதிவர் சந்திப்புக்கு செல்கிறேன். பின்வரும் நண்பர்கள் எல்லாம் தாங்கள் சந்திப்புக்கு வருவதை உறுதி செய்து உள்ளார்கள்.

தருமி ஐயா...

cheena (சீனா) ஐயா..

வால்பையன்.............

டக்ளஸ்...

சில் பீர்..

சுந்தர்..

கார்த்திகை பாண்டியன் 

தேவா ஆகிய நான்!

முகம் தெரியாத நண்பர்கள் சில் பீர், டக்ளஸ், சுந்தர்,வால் ..... கலந்துகொள்கிறார்கள்!!

போன திருச்சி சந்திப்பு அன்று பொதுத்தேர்தல் என்பதால் கடையடைப்பு!! ஆகையால் ரொம்ப அமைதியா இருந்தது!!! இந்த ஞாயிற்றுக்கிழமை மதுரை நகரமே கோலாகலமாக இருக்கும்!!

நாள் : 24 - 05 -2009 - ஞாயிற்றுக்கிழமை.

நேரம் : மாலை 5 மணி

இடம் : ஈக்கோ பார்க் - காந்தி ம்யூசியம் அருகில்.

மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நண்பர்கள் எல்லாரும் கண்டிப்பா வந்து கலந்துக்குங்க. பதிவுகளை படிக்க மட்டுமே செய்றவங்களா இருந்தாலும் வாங்க. கண்டிப்பான முறையில் இது ஒரு நல்ல அனுபவமா இருக்கும்னு நம்புகிறோம். சந்திப்பு பற்றிய சந்தேகங்கள் இருந்தா தொடர்புக்கு...

தருமி ஐயா - 99521 16112

சீனா ஐயா - 98406 24293

மா. கார்த்திகைப் பாண்டியன் - 98421 71138

தேவா @ தேவன்மாயம்- 97512 99554..

ஓட்டைக்குத்துங்க!!

சிறு மாற்றம்:

இடம் : ஈக்கோ பார்க் - மாநகராட்சி அருகில். அன்று ஞாயிறு மாலையாவதால் மிகுந்த கூட்டம் இருக்கும் காரணத்தால், நம் பந்தயத்திடலில் - அதாவது, தமிழில், ரேஸ் கோர்ஸ்ஸில் - நம் சந்திப்பை வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment