Friday 22 May 2009

தாவணி

---------------------------------------------------

நண்பர்களே!! ஒரே அரசியல்,தேர்தல்

என்று ரொம்ப வறட்சியில்

பதிவுலகம்! சூடு தனிய மொக்கையா

ஒரு கவிதை! படித்து விட்டு ....

----------------------------------------------------

ன்னதான் மறைத்தாலும்

தாவணியின் பூக்களெல்லாம்

சொல்லுதே உன் காதலை!!

 

என்னிடம் காதலைச்

சொல்லத்துடிக்கும்

உன் மனதை

மறைக்கமுடியுமா.

தாவணிக்குள்!!

 

என்னைக்

கண்டவுடன்

வெட்கப்பட்டு ஒதுங்குகிறது

உன் தாவணியும்!!

 

4.உன் தாவணி ஓடும்

பால்வீதியில் மட்டும்

எப்படி

இரு நிலவுகள்?

 

எங்கிருந்து ஆரம்பித்தது

உன் தாவணி!

இடையின் முன்னிருந்தா

இல்லை

பின்னிருந்தா?

 

நெஞ்சில் எழுந்து

தோளில் தவழ்ந்து

முதுகில் விழும்

நீர்வீழ்ச்சி உன்

தாவணி!!

 

உன் வாசனையில்

கிறங்கிக்கிடக்கிறோம்

நானும்

உன் தாவணியும்!

 

ஒரு சந்தர்ப்பம் கொடு

உன் தாவணிபோல்

நானும் ஒரு

8 பொடுகிறேன்

உன் இடுப்பிலிருந்து

தொடங்கி !!!

 

தாவணி பிடித்திருந்தால் போடுங்க ஒட்டு தமிலிஷ்,தமிழ்மணத்தில்!!

1 comment:

Several tips said...

நல்ல கவிதை

Post a Comment