Saturday 3 January 2009

தமிழ் மணம் ஒரு பகிரங்க இடுகை-2


தமிழ் மணத்துக்கு வணக்கம்!!!!
நம்ம பதிவுத்திரட்டியில் இணைந்து சந்தோஷமா தினமும் ஏதாவது எழுதி உள்ள தள்ளனும்கிற அளவுக்கு இதில ஆர்வமானவங்க நிறைய பேர் இருக்கிறோம்!!!!
அதுக்கு பின்னூட்டம் போட்டு ஆதரிக்கவே ஒரு போராளிகள் குழு ஆர்வத்த்தோட உக்காந்து இருக்கு!!!
         தமிழ்மணமும், பாராட்டும் இல்லைன்னா ஒன்னுமே இல்லை!!!
         அதுனாலதான் தமிழ் மணத்தையே பாராட்டி ஒரு பதிவு போட்டேன்!!!!
என்னடா பீடிகை பலமா இருக்கேன்னு பார்க்கிறீங்களா?
         இந்த புதுவருடத்திலே எல்லாத்திலும் மாற்றம் எதிர் பார்க்கும் நாங்க தமிழ்மணத்திலும் எதிர்பார்க்க மாட்டமா?
         முதலில் தமிழ்மணத்தில் சேர்ந்த்தையே ஒரு தொடர் பதிவாப்போடலாம்!!
நீண்ட பிரச்சினைகளுக்கு அப்புறம்தான் சேர முடிந்தது!!
          இப்ப உள்ள பிரச்சினை என்னன்னா................
         
         1. தமிழ் மணத்தில் பிற திரட்டிகளில் இணைவதுபோல எளிமையாக இணைய முடியவில்லை!!! இணைவதை எளிமைபடுத்தனும்.... நிறைய பேர் இணைய முடியாம வெளிய நிற்கிறாங்க!!!! உண்மை..

         2.இணைந்தவர்கள் நிறைய பேருக்கு பதிவுப்பட்டை இணைக்க முடியவில்லை.
        
         3.சிலருக்கு புதிதாய் சேர்ந்தவர்களுக்கே பின்னூட்டம் திரட்டப்படுவதில்லைன்னு வருது!!! 

         என் பதிவுலயே தமிழ் நண்பனுக்கு பதிவுப்பட்டை இணையவில்லையே!! தமிழ்த்துளியில் மட்டும் பட்டை இருக்கு!!!
  
         4.பிரச்சினைன்னா தெரிவிக்கச்சொல்றாங்க!! சொன்னா பதில் இல்லை!!
நடவடிக்கையும் இல்லை!!!

        5.யுனிகோடில் 3 பதிவு எழுதி அனுப்பினாக்கூட யுனிகோடில் இல்லைன்னு வருது!!!!
        
        இதெல்லாம் சரிபண்ண நிறைய நடவடிக்கைகள் தேவைப்படுதுங்க!
நான் சொன்னதுல நிறைய தவறுகள் இருக்கலாம்!!!

       நிறைய எனக்குத்தெரியாமக்கூட இருக்கலாம்!!!
   
       ஆனா அதையெல்லாம் குழந்தைக்கு தாய் சொல்லித்தருவது போல தமிழ்மணம் சொல்லித்தந்து, நிவர்த்தி செய்ய வேண்டும்!!!!
         

No comments:

Post a Comment