Friday 23 January 2009

பல கோடிகளும் சில குழப்பங்களும்!!!


இனிய (காலை,மதியம்&இரவு) வணக்கம்!!!!

கொஞ்ச நாள் முன்பு ஒரு செய்தி படித்தேன்!!! என்னவென்றால் மனித உடலில் உள்ள கார்பன், ஆக்ஸிஜன்,ஹைட்ரஜன் மூலக்கூறுகள் - 10 to the power of 32-வருடங்கள் அழியாமல் இருக்கும்.அதாவது 32’0000000000 வருடங்கள்?எவ்வளவுன்னு எண்ணிப்பார்த்தால் மூளை குழம்பிப்போயிடும்!!
அதாவது ஏதாவது ஒரு வடிவில் இருக்கும்! அத்தனை வருடங்களுக்குப்பின்புதான் அதற்கு அழிவு.
சற்று யோசித்தால்” கோடி” என்ற சொல்லை நாம்,கணக்கிலோ,பணத்திலோ எத்தனை முறை உபயோகித்து இருப்போம்.? .......குறைவாகத்தான் இருக்கும்.
அப்படியாயின் புராண காலத்தமிழர்களுக்கு- கோடி,கோடானுகோடி,அதற்கு மேலும் பயன்படுத்தவோ சிந்திக்கவோ,அவற்றை எழுத்தில் பதியவோ வேண்டிய தேவை என்ன? இதுக்கு ஏதாவது காரணங்கள் இருக்கலாம்! தெரிந்தவர்கள் சொல்லுங்க...
என்னடா இரண்டையும் போட்டுக்குழப்புகிறானே என்று நினைக்க வேண்டாம்.
இந்த சிந்தனை என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும், ரொம்ப நாளா..
அதே போல இந்து மதம் மற்றும் இன்னபிற மதங்களிலும் மனிதனின் இறப்பிற்குப்பின் தொடரும் வாழ்க்கை பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
என்னங்க எவ்வளவு வருடம் சிரமப்பட்டு சேர்த்த அறிவு,நினைவுகள் எல்லாம் ஒரே நாளில் மண்ணோடு மண்ணாகிப்போவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே!!உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுதா?
இறந்த பின்னும் நமக்கு வாழ்க்கை ஏதோவொருவடிவில் இருக்கிறது என்ற திருப்தியோடுதான் ஆன்மீகவாதியெல்லாம் இருக்கிறார்கள்.
என்னை உயிருடன் சமாதியில் வையுங்கள் என்று சில (என்ன நம்பிக்கை பாருங்கள்?) சாமியார்கள் சாவதைப் பார்க்கிறோம்!
எல்லோரும் அப்படி நம்பிக்கையோடுதான் இருக்கிறார்களா?........... இல்லை இதுக்கு மேல் ஒன்றும் இல்லை!....குடும்பம்,குழதைகள் எல்லோருடனும் இனி எந்த தொடர்போ,எதுவுமோ இல்லை என்று மனசங்கடத்துடன்சாகிறார்களா?
அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்,உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் கூறுகிறேன்............என்பதுபோல அடுத்த பிறவியில் உங்களுக்கு பதில் அளிக்கிறேன் என்று நான் எழுத முடியுமா?இஃகி. இஃகி...இஃகி...........

அடுத்த பிறவியில நீங்க எனக்கு மனைவியாகவும், நான் உங்களுக்கு கண்வனாகவும் வந்து நீங்க எனக்குச் செய்கிற கொடுமைக்கெல்லாம் பழி வாங்குவேன்னு நம்ம மனைவிமார்கள் எவ்வளவு நம்பிக்கையோடு சொல்றாங்க பாருங்க!!
சில கிராமத்து மனிதர்கள் சாகும்போது “அதோ என் புருஷன் வந்து கூப்பிடுகிறார் நான் போகிறேன்” என்று சொல்லுவதை கேட்டிருக்கிறோம்..
அப்ப ரொம்ப அறிவியல் தெரியாதவன் சந்தோசமா சாகிறானோ?

நமக்குத்தான் பயம்,குழப்பம் எல்லாமா?
அடுத்த பிறவியிலே என்னவாப்பிறக்கப்போறோம் என்று தெரியவில்லை.
நாயாவோ,காக்கையாவோ,ஓணானாகவோ ஏன், கல்,மண்ணகவோ பிறக்கும் வாய்ப்புக்கூட இருக்கும் போல........
(நாயை கல்லால எறியாதீங்கப்பா! காக்கைக்கு சாப்பாடு வைங்க!)
இதைதான்” கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன்! ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலயில் மரமாவேன்” என்று கவிஞன் பாடினானோ??

நான் குழம்பியதும் இல்லாம உங்களையும் நல்லா குழப்பி விட்டேனா?
உங்கள் கருத்தையும் போட்டு எல்லாரையும் குழப்பிவிடுங்க!!

குழப்புகிற தேவா......

No comments:

Post a Comment