Friday 16 January 2009

ஜாலியா ஒரு கவிஜ !!!

நீண்ட நாளா எழுதனும்னு ஒரு கவிதை
வைத்து இருந்தேன்.
சும்மா ஜாலியான கவிதைதான்!
ஜாலி மூடில் படிங்க!

புதுசா கவிஜ எழுதுற நம் அன்பு வலை
கவிஞ்சர்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன்.
------------------

அம்பை எடுத்து
வில்லை வருத்தினான்!
உணவு கிடைத்தது!

பல்லைக்கடித்து
உணவை வருத்தினான்
சக்தி கிடைத்தது!

உடலை வருத்தி
உடற்பயிற்சி செய்தான்
கட்டுடல் கிடைத்த்து!

உளியை எடுத்து
கல்லை வருத்தினான்
சல்லிக்கல் கிடைத்த்து!

கண்ணை வருத்தி
பாடங்கள் படித்தான்
பாஸ் மார்க் கிடைத்த்து!

இதையெல்லாம் கண்டு பின்னர்

பேனாவை எடுத்து
பேப்பரை வருத்தினான்!!
கவிதை பிறக்குமென்று!!!

படித்தவர்.........வருந்தினர்!!!!
------------------

பி.கு:
பொறுமையாக படிச்சதற்கு நன்றி!!
திட்டுறவங்க நல்லா திட்டுங்க!!
எல்லாத்தயும் பின்னூட்டமாவும்
ஓட்டாவும்
குத்துங்க!!

கவிஞ்சர்.தேவா...

No comments:

Post a Comment