Monday 5 January 2009

அம்மா செல்லமா!!! அப்பா செல்லமா?....


                சாதாரணமா குழந்தைகளுடன் விளையாடும் பொழுது பார்த்தால் அப்பாக்கள் தாங்கள் குழந்தைகளுக்கு நிறைய சொல்லித்தரலாம்!!!                            
                கிரிக்கெட்டை எடுத்துக்கிட்டா......
                டிபன்ஸ் ஆடுவது எப்படி....
                டிரைவ் செய்வது எப்படி.......
                கட் அடிப்பது எப்படின்னு.....
     ஆனா நிறைய இடங்களில் பார்த்தா அப்பாக்கள் “எனக்கு எங்கங்க நேரம் இருக்கு அதுதான் ஸ்கூல்ல போய் கத்துக்கிறான் இல்ல!! அவன் பிரில்லியண்ட் பாய்!!எல்லாத்தையும் ஈஸியா கத்துகிட்டு விடுவான்”னு....எஸ்கேப் ஆயிடுவாங்க!! 
                பையனுக்கும் தெரியும்!!!அவனும் ஸ்கூலில் ஆடுகிறான் இல்ல!!
வீட்டில் அவனோடு சேர்ந்தும் அண்ணன் எல்லாம் ஆடுவாங்க!!
கடைசியில என்ன ஆகும் ! 
                அம்மாகிட்ட போவான் பையன்.....
               ”அண்ணனை அவுட் ஆக்கவே முடியலைம்மா என்னைய பேட்டிங் புடிக்க விடமாட்டேன்கிறான்னு ”புகார் போகும்.
                அப்புறம் அம்மா சமாதானம் பண்ணி பந்தை போட்டு அவனை அடிக்கச்சொல்லி ஆட்டத்தில ஜெயிக்க வச்சு , அப்புறம் அவனை சமாதானப்படுத்தி சாப்பாட்டை ஊட்டி தூங்க வைப்பார்கள்!
                 அதேமாதிரி பாருங்க ஒரு குழந்தையை , இவ்வளவு நல்லா டான்ஸ் ஆடுறியே!!! யார் உனக்கு கத்துக்குடுக்கிறாங்கன்னா இந்த மிஸ்கிட்ட கத்துக்கிறேன்னு சொல்லும்!!!சரி வீட்டில் என்ன பண்ணுவேன்னு கேட்டா....“அம்மாகிட்டதான் நான் டான்ஸ் கிளாஸ் போயிட்டு வந்தா வீட்டுலயும் ஆடிக்காட்டுவேன்னு” சொல்லும்!!
                 சரி உங்க அம்மாவுக்கு டான்ஸ் தெரியுமான்னு கேட்டா “அவங்களுக்கு தெரியாதுன்னுதான் சொல்லும்!!!
                 சரி உங்க அப்பாகிட்ட ஆடிக்காட்டுவியா?
                 எங்க!! “அவர் ஆபீஸ் விட்டு வந்தா கம்பியூட்டர்ல உக்காந்துடுவாரு!!
அதை முடிச்சா டிவி பார்ப்பார்!!! அவருக்கு நேரமே இல்லை”ன்னு... ஒரு பதில் தரும்!!!!
                நான்அப்பாகிட்ட ஏதாவது கேட்டா”அப்பாவுக்கு வேலை இருக்கும்மா!.......நீ அம்மாகிட்ட கேட்டுக்கம்மான்னு சொல்லிவிடுவார்”னும் சொல்லும்!!
                 இது தாங்க நிறைய இடத்தில நடக்குது!!!!
                விளையாட்டுக்கு சொல்லவில்லை !!!”நிறைய அப்பாக்களுக்கு குழந்தை என்ன கிளாஸ் படிக்குதுன்னு தெரிஞ்சு இருக்கும்!! ஆனா செக்‌ஷன் என்னன்னு கேட்டுப்பாருங்க தெரியாது!!!
                இன்னும் நிறைய எழுதலாம்!! ஆனா இதுவே போதும்!!! உங்களுடைய சிந்தனையில் நிறைய எண்ணங்கள் இதைப்படிக்கும்ப்போது தோன்றியிருக்கும்!
நானே எல்லாத்தையும் சொல்லுவதை விட உங்க சிந்தனைக்கு சில விஷயங்களை விடுவதே சிறந்ததுன்னு நினைக்கிறேன்!!!இதுக்கு நேர்வினையோ , எதிர்வினையோ நிறைய எழுதுங்க!!!
                நாம் ஆண்கள், அம்மாவைப்போல கொஞ்சம் மாறனும்னு நினைக்கிறேன்!!!
               அன்பையும், அக்கறையையும் நம் குழந்தைகள்,குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள் எல்லோரிடத்திலும் செலுத்துவோமே!!!! 
                என்னங்க நான் சொல்லுறது!!!சரிதானே?......
           
                                      தேவா.....              
                 
                 
                

No comments:

Post a Comment