Saturday 10 January 2009

அம்மா குத்துங்க!! அய்யா குத்துங்க!!

வலை நண்பர்களே!!
பட்டாம்பூச்சி விருது அது இதுன்னு ஏதோ ஒப்பேத்தி புதிய பதிவு எதுவும் போட முடியாம மண்டை குழம்பிப்போய் கிடந்தேன்.
இரவில் முழிச்சு பின்னூட்டங்கள் போட்டு என் புருசனும் போறான் கச்சேரிக்குகிற மாதிரி ஆக்டிங்கைக் குடுத்துக்கினு இருந்தேன்!!
ஒரு பதிவர் ப்ளாகில் ஒரு விளம்பரம்!
தமிழகம்.நெட்.ன்னு ..........................
சரி உள்ளே போய் ஒரு விசிட் அடிப்போம்னு போனேன்!!
அதுவும் ஒரு பதிவு திரட்டி போல!!!
கொஞ்சம் ரெண்டு மூனு பதிவுகளை அப்படியே மேலோட்டமா மேஞ்சிட்டு(நம்மதான் பாட புத்தகத்தையே முழுசா படிக்க மாட்டமே!!!!)இதுல நம்ம பதிவு எதையாவது உள்ள தள்ளுவோம்னு பார்த்தேன். கடித்தனமான ரெஜிஸ்ட்ரேச்னை முடிச்சு உள்ள போய் .......................
ஒரு பதிவை உள்ள தள்ளினேன்!!
டுப்ளிகேட் பதிவுன்னு வருது!!!..........
நம்ம இப்பதானே வருகிறோம்!!!
நம்ம தலைப்பையே யாரும் வச்சுருக்கான்களான்னு பார்த்தேன்!!
நம்ம பதிவேதான்!!!!!!!
அதிர்ச்சி! அதிர்ச்சி!! அதிர்ச்சி!!!!!

......... என்கிற நபர் பெரும் வலை திரட்டர் போல!!!
என் பதிவையும் அவர்தாங்க போட்டு இருக்காரு!!

நம்ம வேற வலைக்கு புதுசா!! என்னடா இது ? நம்க்குத்தெரியாம நம்ம பதிவைப்போட்டுட்டாங்களேன்னு..................ஜிவ்வுனு ஏறிவிட்டது!!!!
சட சடன்னு உக்காந்து.......இன்னைக்கு சூடா ஒரு மேட்டர் மாட்டிச்சுன்னு
(எவ்வளவு முட்டாள் பாருங்க நான்?!!..........................)
இந்த பாராவுக்கு மேல உள்ளதையெல்லாம் எழுதிவிட்டேன்!!!

இன்னைக்கு மாட்டுனான்கடா வசமா!!!ன்னு(நமக்கு ஒரு பதிவு வேற
மாட்டுச்சே இதைப்பத்தி எழுத!!!!)நினைச்சா.....
ஒரு சின்ன்ச் நெருடல்!!!
சரி!! யாரிடமாவது கேட்டு விடுவோம்னு சாய் கணேஷ்க்கு ஒரு ஃபோன் போட்டேன்!!
டுஸ்ஸுனு காத்து எறங்குன பலூன் மாதிரி ஆய்ப்போச்சு!!
இப்படித்தான் நமக்குத்தெரியாம எடுத்துப் போடுவாங்களாமே!!!!நமக்கு இதெல்லாம்
தெரியாதே......
சரி இவ்வளவு நேரம் நான் கஷ்டப்பட்டு எழுதுனத சும்மாவிடவும் மனசு இல்லை!!
அதுனாலதான் இதையும் பதிவிடுகிறேன்!
சரி, நண்பர்களே!!!
நம்முடைய பதிவை தொகுக்கும் முன் நம்மிடம் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்களா?
சொன்னால் நமக்கும் கொஞ்ச்ம் சந்தோஷமா இருக்கும் இல்ல!!!!
என்னைப்போன்ற புதிய பதிவர்களுக்கு இது சற்று மனவருத்தத்தை அளிக்கிறது!!!
தேவா..
...

No comments:

Post a Comment