Sunday 18 January 2009

கொஞ்சம் தேநீர்-5


அன்புக்காதலிக்கு!!!

மழை பெய்த மாலை
தோட்டத்தில் நின்றிருந்தாய்!
ரோஜாக்கள் பூத்திருந்த
நேரம்!

ரோஜாக்கள்
பிடிக்குமா என்றாய்?
ஆம் என்றேன்,

இந்த பூக்களில் எது
பிடிக்கிறது என்றாய்?
உன் முகம் என்றேன்!!

தோட்டத்தில் நிற்காதே
என்றேன்!
ஏன்? என்றாய்,

உன் அழகைக்கண்டு
வெட்கி
பூக்கள் எல்லாம்
வாடி விட்டன பார்!,
என்றேன்.

உனக்கு ரோஜாக்கள்
பிடிக்குமா என்றேன்!
இல்லை! என்றாய்!
ஏன்? என்றேன்!!

பறிக்கவும், பிறர்
சூடவும்
நான் விரும்பவில்லை!
என்றாய்!!!

பின் என்ன வேண்டும்?
என்றேன்,
சிறகுகள் வேண்டும்,
பிறர் பறிக்காமல்
நான்
பறக்கவேண்டும்
என்றாய்!

நான் ஒரு கூட்டுப்புழு!
கிளிகளுக்குள்ள
சுதந்திரம் எனக்கில்லையா?
என்றாய்!

சுதந்திரம் பிறர்
தருவதல்ல!
சிறகுகளும் அப்படித்தான்
என்றேன்!

உன் சிறகுகளை
நீதான் நெய்யவேண்டும்!
உன் நெஞ்சில்
நீதான்
இறகுகளை
வளர்க்க வேண்டும்!

நான் தந்தால் அது
இரவல் சுதந்திரம்

என் மூச்சுக்காற்றை
நீ எவ்வளவு நாள்
சுவாசிப்பாய்?

பிறர்
இரத்தத்தில்
எவ்வளவு நாள்
துடிக்கும் உன்
இதயம்?

பிறர்
கை பற்றி
எவ்வளவு நாள்
நடக்கும் உன்
கால்கள்?

சிந்திக்கிறாயா
அன்பே!!



No comments:

Post a Comment