Friday 30 January 2009

கலாச்சார சீரழிவும் வன்முறையும்!!!

அண்மையில் கர்நாடக மாநிலத்தில் உணவு விடுதி ஒன்றில் இரவு நடன நிகழ்ச்சியில் ஓட்டலுக்குள் புகுந்த ஒரு அமைப்பினர், கலாசாரத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி, நடனம் ஆடிய இளம் பெண்களையும், பார்வையாளர்களையும் கண்மூடித்தனமாக தாக்கினர்.ஓட்டலுக்கு வெளியில் தப்பிச் செல்ல முயன்ற பெண்களை ஓட ஓட விரட்டி தாக்குதல் நடத்தினர்.

இது கலாச்சார சீர்கேடு என்றால் இதனை இவர்கள் அனுகிய முறை சரிதானா?
இந்த இளைஞர்களுக்கு பிறர்மீது வண்முறையை பிரயோகிக்க என்ன உரிமை உள்ளது?

இதுபோல எங்கு கலாசார சீர்கேடு என்று இவர்கள் கருதும் நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அங்கு இவர்கள் அங்கு தோன்றி கலாசாரத்தை பாதுகாப்பார்களா?

இப்படி இவர்கள் செய்துதான் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டுமா?அல்லது இப்படி செய்வதால் கலாசாரம் காப்பாற்றப்படுமா?
என்று பல கேள்விகள் எழுகின்றன!!!!

முறைகேடான ஒழுக்கக் குறைவான செயல்கள் விடுதிகளில் நடக்க இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது யார்?

அதற்குப்பொறுப்பான அந்தப்பகுதி அதிகாரிகள் மீது அல்லவா நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

தமிழகத்தில் சில வித நடன நிகழ்ச்சிகள்,குதிரைப் பந்தயம் ஆகியவை தடை செய்யப்பட்டு உள்ளது.

கர்நாடகத்தில் அனுமதி அளிக்கப்பட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கண்காணிக்க வேண்டியது காவலர் கடமை..அங்கு முறைகேடுகள் நடந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவர்கள் பணியும் கடமையும்!!

இங்கு காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது?அல்லது பலமுறை காவல் துறைக்கு தெரிவித்தும்,போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகளோ, விடுதி நிர்வாகமோ கண்டு கொள்ளாத்தால்தான் இந்த இளைஞர்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடு பட்டார்களா?

அதிகாரிகள் கையூட்டு பெற்று கண்டும் காணாமல் விட்டால் ,அவர்களை தண்டிக்காமல் ....பேருக்கு பணிமாற்றம் என்று நாடகங்கள்தான் அரங்கேறுகின்றன.

இதில் சில கவனிக்க வேண்டியவை என்னவென்றால் இப்படி நடன நிகழ்ச்சிகள் கர்நாடகத்தில் நிறைய இடத்தில் நடைபெறுகின்றன..

இவர்கள் இப்படி செய்வதால் கலாசாரம் காப்பாற்றப்படும் என்றால் சாதாரணமாக குடித்துவிட்டு அநாகரீக செயல்களில் தினமும் ஈடுபடும் ஆண்கள் மீது என்ன நடவடிக்கை இவர்கள் எடுத்தார்கள்!!

அல்லது இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் விபச்சார விடுதிகளை என்ன செய்தார்கள்!!

இவர்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட விடுதியை மட்டும் தாக்க வேறு காரணங்கள் ஏதும் இருந்தனவா?
இப்படி நம்மிடம் பல கேள்விகள் தோன்றுகின்றன..

ஒன்று நிச்சயம் !!
இப்படி உணர்ச்சி வசத்தில் இளைஞர்களுக்கு மதவாத கருத்துகளை போதித்து அவர்களை வண்முறையில் ஈடுபடுத்துவது மிகத்தவறு..

இதனால் நாட்டில் சாதாரண கலவரம் ,கல்வீச்சு முதல் குண்டு வீச்சு வரையான பெரிய கொடுமைகள் நடக்கின்றன..

இதில் ஈடுபட்டு சிறை செல்லும் இளைஞர்களின் எதிர்காலம் என்ன?
எங்கு கலவரம்,குண்டு வெடிப்பு என்றாலும் அவர்களைத்தான் முதலில் கைது செய்வார்கள்!! விசாரணையில் பலிகடா ஆக்கப்படுவார்கள்..

எது எப்படியோ ...... பெண்கள் மீதோ ஆண்கள் மீதோ வன்முறையை பிரயோகிப்பது தவறு.!

பெண்கள்தான் கலாச்சார சீரழிவுக்கு காரணம் என்பதும் தவறு..

No comments:

Post a Comment