அந்த அம்மாவுக்கு 50 லிருந்து 60 வயதுக்குள் இருக்கும்! நடுத்தரமான உடலமைப்பு!களைப்பும் ,உடல் பலகீனமும் பார்த்தவுடனேயே தெரிந்தது!!கண்கள் வலியில் உக்காரலாமா என்று கெஞ்சின!!!
உள்ளே வரும்போது தன்னால் நடந்து வர முடியாமல் இரண்டு பேர் இரண்டு பக்கமும் பிடித்துக்கொண்டு கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு வந்தார்கள்!
பார்த்த்வுடனேயே அவர்கள் நடக்க சிரமப்படுகிறார்கள் என்பது தெரிந்தது!!!கூட்டிக்கொண்டு வந்தது ஒரு ஆண் ஒரு பெண்!..... அந்த அம்மாவுக்கு மகனோ! மகளோ!முகஜாடையில் சொந்தம் போலத்தெரிந்தது!
எனக்கு அவர்கள் இருவரையும் பார்க்கும் போது கோபம்தான் வந்தது! நடக்க முடியாத பெண்மணியை சிரமப்படுத்தி நடத்தி கூட்டி வருகிறார்களே என்று!!!.
கோபம் காட்டாமல் அமைதியாக!”ஏப்பா? வலி அதிகம் இருக்கும் போல இருக்கே! வீல் சேரில கூட்டி வரலாம் இல்ல! நடக்க விடாதீர்கள்! மேற்கொண்டு பிரச்சினையாகிவிடுமே! ”என்றேன்.
இல்ல சார்! நேத்துத்தான் இரவு பாத்ரூம் போகும் போது ஸ்லிப் ஆயிட்டாங்க போல இருக்கு! நாங்க யாரும் பார்க்கவில்லை!! தன்னால எழுந்து வந்து படுத்திட்டாங்க!காலையில் கொஞ்சம் வலது இடுப்பில் வலி இருக்கு என்றார்கள்! சரியாக நடக்க முடியவில்லை!அதுதான் கூட்டிக்கொண்டு வந்தோம்!!
சரி! அந்த இருக்கையில உக்கார வைங்க! ஏம்மா கால் சறுக்கி விழுந்தீர்களா? இல்லை
இடுப்பு வலி வந்து விழுந்தீர்களா? என்று கேட்டேன்...
அவர்களுக்கு சரியாக சொல்லத்தெரியவில்லை!!
மேலே கூறிய நிகழ்வு அடிக்கடி மருத்துவமனைகளில் நாம் பார்ப்பதுதான்!
நம்மில் சிலருக்கு இது பரிச்சயமாக, சொந்தக்காரர்களுக்கோ,நண்பர்களுக்கோ ஏற்பட்டதாகக் கூட இருக்கலாம்!!
மேலே கூறிய பிரச்சினை இருந்தால் பெரும்பாலும் அது இடுப்பு எலும்பு முறிவு ஆகத்தான் இருக்கும்!!வயதானவர்களுக்கு எலும்புகள் பலவீனமாக இருப்பதால் கீழே விழாமலேயே கூட இடுப்பு எலும்பு முறிவு ஏற்படுகிறது!
இதற்கு பெரும்பாலும் நாம் நுடவைத்திய சாலையில்தான் வைத்தியம் பார்க்கிறோம்!காரணம்? வயசாகி விட்டது...இனிமேல் வைத்தியம் பார்த்து என்ன பண்ணப்போகிறோம் என்ற அலுப்பு,பணவசதியின்மை இன்ன பிற காரணங்கள்!!!
இடுப்பு எலும்பு உடைந்து சரியான சிகிச்சை பெறாதவர்கள், வெகு விரைவில் நடக்கமுடியாததால், மனம் உடைந்து,தன் சுயகௌரவம் இழந்து மன நோயாளி போல ஆகிவிடுகிறார்கள்!!தான் குடும்பத்துக்கு ஒரு பாரம் போல உணர்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் அன்றாடக்கடமைகளைக்கூட அடுத்தவர் உதவி இல்லாமல் செய்ய முடிவதில்லை!
ஒரு ஆய்வின்படி 50% இடுப்பு எலும்பு உடைந்த நோயாளிகள் உடைந்து ஒரு வருடத்துக்குள் இறந்து விடுகிறார்கள்!
ஆயினும் நவீன அறுவை சிகிச்சை மூலம் நன்றாக நடக்க வைக்கவும், எவருடைய துணையும் இல்லாமல் பழைய நிலைமைபோல் வாழவைக்கவும் முடியும்!!!
நம் பாசத்துக்குரியவர்களுக்கு வயதான காலத்திலும் கௌரவமான மன நிறைவான வாழ்க்கையை அளிப்போம்! அதுவே நாம் அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரும் கடமையும் உதவியும்!!!
தேவா..........
Monday 12 January 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment