Tuesday 20 January 2009

இரண்டு பால்!!!

வணக்கம்!
கவிதை,கவிஜ எல்லாம் படிச்சு இருப்பீங்க! புதுசா ஏதாவது போட்டுக்கிட்டெ இருக்கணும்.இல்லேன்னா தமிழ் வாக்காளப்பெருமக்களிடம் நம்ம நிக்க முடியுமா?
எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தாங்க-நான் இப்ப சொல்லப்போறது!

ரெண்டு பால் மனிதனுக்கு முக்கியங்க!!
ஒன்னு தாய்ப்பால்!
குழந்தை பிறந்தவுடனேயே அம்மாவுடைய தாய்ப்பால் கொடுக்கணுங்க!ஏன்னு நம்ம எல்லாருக்குமே தெரியுமுங்க.அதுல நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்குங்க.நம்ம வீடுகள்ள மாடு கண்ணு போட்டுச்சின்னா சீம்பால்னு திக்கா பால் நமக்குத்தருவாங்க.கண்ணுக்குட்டி குடிச்சது போக மிச்சமிருக்கும்-நமக்குதருவாங்க.இப்பத்தான் வீடுகள்ள மாட்டயே காணுமே.அதுனால இப்ப உள்ள பிள்ளைகளுக்கு சீம்பால்னா தெரிய ஞாயமில்லைங்க.
அதுபோல தாய்ப்பாலும் எங்கங்க குழந்தைக்குக் கொடுக்க முடியுது! பிறந்தவுடனேயே பால் சுரக்கலைன்னு டப்பா பால் வாங்கி வந்து வச்சிடுறாங்க.”என் ரெண்டு குழந்தைக்குமே டின் பால்தான்”ங்கிறது ஃபேஷனாப்போச்சு!

சரி இந்தப்பால் கொடுக்க முடியல! விடுங்க!ரெண்டாவது பால் ரொம்ப இதேபோல ரொம்ப முக்கியங்க! நான் என்ன சொல்ல வற்றேன்னு உங்களுக்கே தெரிந்து இருக்கும்!!

ஆமாங்க! தமிழ்ப்பால்தாங்க!!தாய் மட்டுமில்லாமல்,தந்தை,சகோதரன்,சகோதரி என்று எல்லோருமே இந்தப்பால் ஊட்டலாமுங்க.களிமண் இறுகுவதற்குள்ள சட்டியாவோ,பானையாவோ புடிக்குறோம்.அதுபோல குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே தமிழைக்கத்துக்குடுத்து விடவேண்டுங்க!

நம்ம எல்லாம் சின்ன வயசிலேயே நாவல்,கதை எல்லாம் படிக்க ஆரம்பித்து இருப்போம்!இப்ப நம்ம குழந்தைகள் எழுத்துக்கூட்டி படிக்கவே சிரமபடுறாங்க! தமிழும் தெரியலெ!ஆங்கிலமும் தெரியலே!எல்லாம் பாதி பாதி!
தமிழை சின்னவயதிலேயே கத்துக்கொடுத்து விடனுங்க.அப்பத்தான் தமிழில் சிந்திக்க ஆரம்பிப்பாங்க.தமிழும்,தமிழனும் இந்த உலகத்தில் இருக்கமுடியும்!
ஆங்கிலத்தை விடுங்க! தமிழில் படித்த தமிழர்கள் ஆங்கில கணிணித்துறையையே பார்பொற்றும் விதத்தில் கட்டி ஆளுகிறார்களே!!

தமிழ்ப்பற்று தேவா...

ஒரு மாற்றத்துக்காகா உள்தலைப்பு கீழே!!

தாய்ப்பாலும் தமிழ்ப்பாலும்!

No comments:

Post a Comment