Friday 2 January 2009

நீ தாண்டி எனக்குப்புடிச்ச அழகி!!!!!


             ன்ன வலை நண்பர்களே!!!
புத்தாண்டு கொண்டாட்டங்கள் எல்லாம் எப்படி இருந்தது? ஒரே பிரியாணியும்,கேக்கும்,இனிப்பும் சாப்பிட்டு நிறைய பேருக்கு சாப்பாட்டைக்கண்டாலே பயமா இருக்குங்க!!!! உங்களுக்கும் அப்படித்தானா?
             புத்தாண்டில் ஏதாவது புதியதாக நல்ல விசயம் ,நல்ல மாற்றம் நம்ம பழக்கங்களில்.... செய்யலாம்னு யோசிச்சீங்களா?
             கஷ்டம் வாழ்க்கையில் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும்!!!
கஷ்டம் இல்லாத வாழ்க்கை உண்டா?
             நான் ஒரு சின்ன முடிவு பண்ணினெங்க!!!!
 
             குழந்தைய எடுத்துக்கிட்டிங்கன்னா அம்மா,அப்பா தூக்கணும், பாராட்டனும்னு நினைக்குது.

             ஸ்கூல் பையனைப்பாருங்க வாத்தியார் பாராட்டனும்னு நினைக்கிறான்!!
             
             காலேஜ் பசங்களைப்பாருங்க- மச்சி டிரஸ் தூளா இருக்கு!!!எங்கடா வாங்கினே!!!எதாவது நண்பர்கள் பாராட்ட மாட்டமான்ன்னு எதிர்பார்க்கிறான்!!!
             பொண்னுங்க !!!!புது சாரி கட்டினவுடனே அப்படியே ஒரு ஷோ காடுவாங்க காலேஜில!! நண்பிகள் அதப்பாத்து.................. சாரி சூப்பரா இருக்குடி! எங்கடி வாங்கினே?................எப்பிட்றி இப்பிடி அழகா கட்டுற!!!!
               
              லவ்வரோ ,மனைவியோ ........எங்கேயாவது வெளியே கிளம்பும்போது திடீர்னு பழைய மேக்கப் கிட்டைப் கண்டு புடிச்சு முகத்தில பூசி.................மூஞ்சிய  ஒரு வழி பண்ணி .........ஒரு செமி கோஸ்ட் ரேஞ்சுக்கு மாறி நிற்பாங்க!!!!அந்த நேரத்துல ஒபினியன் வேற கேப்பாங்க!!!! நம்ம தப்பித்தவறி உண்மை விளம்ப்பியா மாறி ஏதாவது சொன்னோம் !..............அதோட ஒழிஞ்சோம்!!!!
              அதுக்கு பதிலா மனசக்கல்லாக்கிகிட்டு.....................கீழே உள்ள மாதிரி சொல்லனும்...
              .நீ ரொம்ப அழகா இருக்கேடி!!!!
              இந்த மேக்கப் சூப்பரா இருக்கு!!
              உண்மையாவா சொல்றீங்க?
              ஆமாம்!!!!!!!!
              அன்னைக்கு பல்லுக்குட்டி ,பல்லுக்குட்டின்னு பல்லை கிண்டல் பண்ணிங்க?................
              அது சும்மா உன்னைய வெறுப்பேத்துறதுக்காகச்சோன்னேண்டி!!!
              நீ தாண்டி எனக்குப்புடிச்ச அழகி!!!

               என்ன முடிவு பண்ணினேன்னு கேக்கிறீங்களா? எல்லாரையும் பாராட்டுறதுதாங்க அது!!!!!!!!!!!!!!!
                நீங்களும் தயாரா?
               ஓ.கே................

                தேவா........... 
             
            

No comments:

Post a Comment