Monday 6 April 2009

உயிர் எந்திரம்-கொஞ்சம் தேநீர்--13

 

கேள்வியின் துளிகள்

சிந்திக்கிடக்கும்

முடியாத இரவில்

நீண்டு!

 

வெப்பம் தாங்கிய

மயிர்க்கால்கள் அடங்கியும்

எழுந்தும்

உயிர்த்தெழும்

மீண்டும் மீண்டும்!,

 

பிறப்பின் நீண்ட

கரையோரங்களின் வளைவுகளில்

தொக்கி நிற்கும்

சொல்லியும் சொல்லாத

ஒரு செய்தி!

 

உள்ளும் புறமுமாய்

இயங்கும்

உலகின் முதலும்

முடிவுமான

உயிர் எந்திரம்!!

No comments:

Post a Comment