Tuesday 21 April 2009

கொஞ்சம் தேநீர்-15 -நிழல்!!

வலை நண்பர்களே!! இதற்கு முன் கொஞ்சம்

தேநீர்-14- நானும் என் நிழலும்

எழுதி இருந்தேன்!! ரசித்தவர் பலர்!!

சிலர் புரியவில்லை என்றனர்!

அந்தக் கவிதை இளமை விகடனில்

வெளியாயிற்று!!

http://youthful.vikatan.com/youth/thevanmayampoem16042009.asp

தற்போது அதே நிழலின் தாக்கத்தில்

ஒரு சிறிய சிந்தனை!!

-------------------------------------------------------------------------------

கொஞ்சம் தேநீர்-15-நிழல்!

கொஞ்சிப் பாலூட்டுகையில்

அன்னையின் மடியில்

மறைந்திருந்தது

என் நிழல்!

 

கைபிடித்து

கடைவீதி நடக்கையில்

தெரியவில்லை என் நிழல்!

என் அப்பாவின்

நிழலில் மறைந்திருந்து,

 

கவிதைப் போட்டியில்

பரிசு பெற்ற பாடலின்

வரிகளின் ஊடே

பொதிந்து கிடந்தது

தமிழ் ஐயாவின் நிழல்!

 

கல்லூரியில்

ஆய்வுக்கட்டுரையின்

அறிவியலின்

விரிவுகளில்

மறைந்து கிடந்தது

என் பேராசிரியரின் நிழல்!

 

தயங்கியும் மயங்கியும்

தள்ளாடிய

என் வாலிபம்

தஞ்சம் புகுந்தது

என் மனைவியின் நிழலில்!!

 

இன்னும் காத்திருக்கும்

வாழ்வின் வழிநெடுக

எண்ணிலடங்கா

நிழல்கள்!!

 

நிழல்கள்

இல்லாமல்

நிங்களோ நானோ

யாருமில்லை!!

-------------------------------------

 

பிடித்திருந்தால் தமிலிஷிலும்

தமிழ்மணத்திலும் தட்டுங்க!

No comments:

Post a Comment