Thursday 2 April 2009

பதிவர் என்றால் இளப்பமா?

 

சொல்லாமலே யார் பார்த்தது!! சொல்லத்தான் நினைக்கிறேன்!!!

என்ன பாட்டா கிளப்பறேன்னு பார்க்கிறீர்களா? என்ன செய்வது?

”இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாயோ?”- என்பது போல சொல்லவந்ததைச் சொல்லி விடுகிறேன்!

பதிவரா வந்து என்ன சாதித்தோம்?சாட்டில் ஒரு நண்பர் கேட்டார்” எதுக்காக ப்ளாக் எழுதுகிறீர்கள் ? என்ன யூஸ்?” என்றார்.

இதற்கு என்ன பதில் சொல்வது? பதிலும் கேள்வியும் தகவல்களும் உலகம் முழுக்க வலை முழுக்க பரவிக்கிடக்கின்றன!!

தேவையானதை பதிவர் தொகுக்கிறோம்!! கடை போலத்தான்!!  தேவையானவர் ருசிக்கிறார்.

அவ்வளவுதான்!

ஆனந்தவிகடன் நான் விரும்பிப் படிக்கும் இதழ்களில் ஒன்று!! எல்லோருக்கும் புடிக்கும்னு நினைக்கிறேன்!! குமுதம், விகடனில் எழுத என் அப்பாவுக்கு ரொம்ப ஆவல்!! நிறைய எழுதியிருக்கிறார்!!

அப்பொழுதிலிருந்தே எழுத்துமேல் எனக்கு ஆசை!! ஆனால் தொடக்கம் ஒன்று வேண்டுமே!

கல்லூரி மலரில் என் கவிதைகள், ஓவியங்கள் வந்துள்ளது!! 

அதன் பின் எழுதும் ஆர்வம் இல்லை!! ப்ளாக் தான் நான் எழுத வாய்ப்பாக அமைந்தது!!

எழுத வந்தவுடன் ஆதரவளித்த பதிவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்!!

அதன் பிறகு வலைச்சர ஆசிரியர்!!  எழுதும் ஆவலைத் தூண்ட இவை போதாதா?

இன்று யூத் விகடன்!!! யூத் விகடனில் முதல் பதிவை கண்ட  நம் பதிவர்கள் சந்தோசத்தில் குளித்தார்கள்!!வலையுலகமே திருவிழாக்கொண்டு கொண்டாடிமகிழ்ந்தது!! அது புதிய பதிவர்களுக்கு தரமான பதிவுகள் எழுத யூத் விகடன் தந்த உற்சாக மருந்து!!

அதுவே பதிவர்களுக்கு சந்தோசத்தை அள்ளி அள்ளித் தந்தது!! தந்து கொண்டு இருக்கிறது! ஊக்கம் இருந்தாத்தானே எழுத ஒரு ஆர்வம் வரும்!!

அந்த விதத்தில் யூத் விகடனுக்கு நன்றி! நன்றி நன்றி!!

நானும் இப்பப் போடுவோம், அப்பப்போடுவோம் என்று காலம் கடத்திவிட்டேன்.. இப்போதுதான் நேரம் வந்தது!!

லேட்டா எழுதினாலும் லேட்டஸ்டும் சேர்த்து எழுதுவோம்!! என்ன நான் சொல்வது?

யூத் விகடனில் என் பதிவுகள் இதுவரை 9 ஒன்பது வந்து உள்ளது!!

எனக்கு மகிழ்ச்சிதான்!! அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!!

1.இந்தியா அமெரிக்காவை முந்துகிறது! ----http://youthful.vikatan.com/youth/bcorner2.asp

2.தலை நிமிர வைத்த இந்தியன் ------http://youthful.vikatan.com/youth/bcorner3.asp
3.தண்ணீர் தண்ணிர் ---http://youthful.vikatan.com/youth/bcorner3.asp
4.இளைஞர்களும் தவறுகள் 10 ம் ---http://youthful.vikatan.com/youth/bcorner3.asp
5.மரம் ஒரு அதிசயம் ---http://youthful.vikatan.com/youth/bcorner3.asp 6.மரியாதைக் கொலையும் மடியும் மங்கையரும்!
7.வன்முறை இளைஞர்களும் நாமும் ---http://youthful.vikatan.com/youth/bcorner.asp

8.மனைவியை மயக்கும் மந்திரங்கள்--http://youthful.vikatan.com/youth/devanmayamstory23032009.asp

9.சினேகிதியை வசீகரிக்க உங்கள் அறையில் இருக்க வேண்டிய 8 விசயங்கள்!http://youthful.vikatan.com/youth/dhevanmayamstory02042009.asp

என் பதிவுகளை வெளியிட்ட யூத் விகடனுக்கு நன்றிகள் பல!!!

தமிழ் இதழ்களில் வருவதைவிட சிறப்பான ,தரமான பதிவுகளை நம் வலையுலக அன்பர்கள் தந்துகொண்டு இருக்கிறார்கள்!! என்பது இன்றைய தமிழ் இதழ்களைப் படிப்பவர்களுக்கு நன்கு தெரியும்!!

பதிவர்கள் தரமான பதிவுகள் நிறையத்தருகிறார்கள்!!திறமை மிகுந்தவர்கள் என்பதில் சந்தேகமேயில்லை!

நான் பொறாமைப்படும் பதிவர்கள் நிறய இருக்கிறார்கள்! அவர்களிடமிருந்து நான் தினமும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்! ஏகப்பட்ட துரோணர்களுக்கு

 ”நான் கட்டைவிரல் கொடுக்காத ஏகலைவன்!”

No comments:

Post a Comment