Tuesday 14 April 2009

நானும் என் நிழலும்-கொஞ்சம் தேநீர்-14

நானும் என் நிழலும்

அமர்ந்திருந்தோம்

எதிரெதிரே,

 

மேசையின் மீதும்

என் பிம்ப முகத்திலும்

கழுவப்படாத கறைகள்!

 

ஒளியும் நேரமும்

கரைந்து கொண்டிருந்தன

எங்கே போனாய்

உனைதேடி

நானும் என் நிழலும்!!

 

மௌனம் கலைத்து

என்னைப்பற்றிய விசாரணைகளை

தொடங்கியது

என் நிழல்

 

நிஜங்களை

அறிந்த நிழலுக்கு

சொல்லமுடியவில்லை

எந்த பதிலும்

என்னால்!

 

தொடரும்

கேள்விகளின் உக்கிரம்

தாங்க முடியாமல் நான்,

காத்திருக்கிறேன்

ஒளியும் நேரமும்

கரைய!

 

பதிலளிக்க முடியாத

ஒரு கணத்தில்

ஒளியுடன் மறைந்தது

என் நிழல்!

 

தொடரும்

இரவில் நான் மட்டும்

தனியாக!! 

 

படித்து விட்டீர்கள்!

போடுங்க ஓட்டு தமிலிஷ்,

தமிழ்மணம்

இரண்டிலும்!!

 

 

No comments:

Post a Comment