Tuesday 21 April 2009

கலைஞரே! ஒபாமாவே!! -போரை நிறுத்துக!!

ஈழத்தமிழர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

தமிழர்கள் தினமும் கொல்லப்பட்டு வருவதும் தினமும் நூற்றுக்கணக்கில் மடிவதும் நமக்கு சொல்லொனாத் துயரத்தை ஏற்படுத்துகிறது.

ஈழத்தமிழ் பற்றி பேசியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஈழத்தமிழர் பற்றியும் சண்டை பற்றியும் இன்று பேசாதவர் இல்லை.

தேர்தல் நேரத்தில் இதனை தூக்கி ஓரத்தில் வைத்துவிடுவார்களோ என்று எண்ணிய நேரத்தில் முழு போர் நிறுத்தம் வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது!!

நாளை இதற்காக பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது அரசியலோ, இல்லை ஓட்டு வாங்கும் யுக்தியோ எதுவாக இருப்பினும் அனைவரும் அனைத்துக்கட்சியும் கலந்து கொண்டு தங்கள் நிலையை உலகுக்கு மத்திய அரசுக்கு உரைக்கும் நேரமிது!!

 

அதே நேரம் அமெரிக்க அதிபர் இலங்கையில் ராணுவம் தமிழர்களைக் கொல்லுவதை நிறுத்தக்கோரியுள்ளார்.

வரவேற்கத்தக்கது. புஷ் இருந்தபோது ஒரே நாளில் பாகிஸ்தானில் முஷரஃபை பதவி விலக ஆணையிட்டார்.

அதே அதிகாரத்துடன் ஒபாமா ராஜபக்‌ஷேவுக்கு உத்தரவிடலாம்..

1.கலைஞர் நெருக்கடி கொடுத்தால் அத்துடன் அனைத்துக்கட்சித்தலைவர்களும் நிர்பந்த்தித்தால் இந்திய அரசு மிரட்டினால் உடனே இலங்கை பணியும்!!

2.ஒபாமா உத்தரவிட்டால் உடனே போர் நிறுத்தம் ஏற்படும்! இதற்கு.இந்தியா,நார்வே, இங்கிலாந்து அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்.

நடக்குமா?

தமிலிஷ்,தமிழ்மணம்!!

No comments:

Post a Comment