Friday 24 April 2009

இங்கு பிறந்த எனக்கு இந்த ஊர் போதும்-இளையராஜா!!

 

 

இளையராஜாவின் இசையில்தான் நாம் மயங்கி இருக்கிறோம். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கலைஞனின் முகத்தை வெண்திரையில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கப்போகிறது!!

 

அவரது கோடானு கோடி ரசிகர்களுக்கும் இது இன்பச்செய்தியாக இருக்கும்!!

அழகர்மலை என்ற படத்தில் இயக்குனர் ராஜ்குமார் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்!!

சங்கிலிமுருகன் இப்படத்தின் தயாரிப்பாளர்!!

””உலகம் இப்போ”  என்ற பாடலைப் பாடி அந்தப் பாடலுக்கு அவரெ நடித்து உள்ளார்.ராஜா பிறந்து, வளர்ந்த இடங்களில் இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ராஜாவுக்கு‌ப் பிடித்தமான திருவண்ணாமலை ரமண‌ர் ஆஸ்ரமத்திலும் பாடலை எடுத்திருக்கிறார்கள்.

பாடல் வரிகள்:

உலகம் இப்போ எங்கே போகுது

எனக்கு இந்த அன்னை பூமி போதும்

இங்கு பிறந்தவரும் எங்கோ போகிறார்

எனக்கு இந்த சொந்த நாடு போதும்

இந்த மண்ணை விட்டு நான் எங்கே செல்வேன்?”

பாடல் வரிகள் ஏதோ சொல்கிறதோ?

இந்தப்பாடலில் அவர் அன்னையின் சமாதி, அவர் மனைவியுடன் விளையாடிய ஆலமரம், மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆகிய இடங்களும் இடம்பெறுகின்றனவாம்!!

No comments:

Post a Comment