Saturday 20 December 2008

கொஞ்சம் தேநீர் -2





மௌனங்கள்!!







கண்ணே!
உன் உதடுகளின்
மௌனத்தில்
என் உள்ளமே
ஊனமாகிவிடுகிறது!

உன் மௌன ஊசிகள்
என் இதயத்தைக் குத்தும்போது
வழிகிறது என் உயிர்!!

உன் பேச்சைக்கேட்க
என் கண்களும்
ஏங்குகின்றன,
உப்புக்கரிக்கிறது
என் உதடுகளில்!

உன் பேச்சை 
சுவாசித்த என் நெஞ்சம்
காற்றை 
சுவாசிக்க மறுக்கிறது!!

உன் மௌனங்கள் 
தாக்கும் ஒவ்வொரு முறையும்
நான் இறக்கிறேன் 
உயிருடனேயே!

 இரவு சாப்பிட்டீங்களா?
 
பதிவு போட தூக்கம் வராம

இருக்க கொஞ்சம் தேநீர்

குடிங்க!!!

தேவா...

No comments:

Post a Comment