Wednesday 10 December 2008

ஒரு உயிரும் நானும்!

ரத்தமும் நண்பனும் பதிவைப்படித்தவர்களில்
சில நண்பர்கள் இறப்பை இவ்வளவு எளிமை
யாக எடுத்துக்கொள்கிறீர்களா என்று மிகவும்
வருத்தப்பட்டிருந்தார்கள்!!!

   அவர்களுக்கு நன்றி!!

 ஒரு நோயாளி என் நண்பனின் அக்கா!
கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக‌
உட்கார்ந்து இருக்கும் போது மண்ணெண்ணையை
இரன்டு கால்களிலும் இடுப்புவரை ஊற்றி
தீ வைத்துக்கொண்டார்கள்!

   நாந்தான் அந்த பெண்ணை தினமும்
பார்ப்பேன்!
  
   தொடை இரண்டிலும் உள்ள தோலை
தினமும் சலம் பிடிக்காமல் வேட்டி வெட்டி
சுத்தப்படுத்துவேன்.

   21 வது நாள் என்று நினைக்கிறேன்!!
விடுதியில் இருந்த எனக்கு போன் வந்தது!

   உடனே சென்று பார்த்தேன்! அப்பெண் 
மூச்சுவிட சிரமப்பட்டுக்கொன்டு இருந்தார்கள்
அருகில் நண்பர்!
   உடனே ட்ரிப்(குளுக்கோஸ்)பைப் பார்த்தால்
மெதுவாக இருந்த்து!

    இரத்தநாளங்கள் சரியாக தெரியவில்லை!
உடனே கையில் தோலை அறுத்து இரத்த நாளத்தில்
ட்ரிப் ஆரம்பித்தேன்!

    உயிர் காக்கும் மருந்துகள் அதிக அளவில்
தேவைப்பட்டதால் வார்டு வார்டாகச்சென்று
சேகரித்துவந்து அவருக்கு செலுத்திக்கொண்டே
இருந்தேன்.
    
    சுய நினைவு போவதும் வருவதுமாக 
இருந்தது!

    கிட்டத்தட்ட ஒன்றறை நாள் அப்பெண்ணின்
அருகில் இருந்து சிகிச்சை அளித்தேன்.

   அப்பெண் இறந்து விட்டாள்! நான் அந்த‌
ஒன்றரை நாளும் எதுவும் சாப்பிடவில்லை!
நம்புங்கள் காபி கூட அருந்தவில்லை,நானும்
என் நண்பனும்!

   அப்பெண் இறந்தவுடந்தான் அந்த வார்டை
விட்டே வெளியே வந்தேன்.
   அதன் பிறகுதான் பாடியை மார்ச்சுவரி அனுப்பிவிட்டு
வந்து ஒரு மாம்பழ சாறு அருந்தினேன்.

   ஏன் இதைசொல்கிறேன் என்றால் உயிர் விலை
மதிக்கமுடியாதது! நான் அதனை அறிவேன்!!!!
 

No comments:

Post a Comment