Tuesday 30 December 2008

புத்தாண்டு கடி!!!!!


        ல்லோரும் புத்தாண்டை எப்படிக்கொண்டாடுவது என்று பலவிதமான ப்ளான்களில் இருப்பிங்க!!!புத்தாண்டுக்கு எப்படி எஸ்.எம்.எஸ் அனுப்புவது....எப்படி ப்ளாகில் சொல்வதுன்னு யோசிச்சுக்கிட்டே இருப்பிங்க!!!
        ப்ளாக் மன்னர்கள் எப்படியேல்லாம் புதுமையா வாழ்த்துச்சொல்லப்போறாங்கன்னு நான் ரொம்ப ஆவலா இருக்கேன்!
        நானும் ஏதாவது எழுதியாக வேண்டுமே!!!!.................

        சரி, மக்களைக் கடிக்கிறதுன்னு முடிவு பண்ணியாச்சு!!! கொஞ்சமா கடிச்சா என்ன, செம கடி போட்டா என்ன? வந்து உதைக்கவா போறீங்க!!!
        ஓங்கி மூஞ்சி மேல குத்துனாத்தான்யா இவன் அடங்குவான்னு கடுப்பா இருக்குமே............இருக்கும்...........இருந்தாகனும்!!!!! அப்படி இருந்தா........... இந்த இடுகைக்கு மேல கட்டை விரல் மேல தூக்கி இருக்கும் அதுல ஒரு குத்து குத்துஙக...............மத்தபடி வீரத்தை எல்லாம் வீட்டுல காட்டாம ரெண்டு நாளைக்கு நல்ல புள்ளையா இருங்க!!!!
         அயல் நாட்டு மக்கள் போன் மேல போன் பொட்டு வீட்டுல பாசத்தைப்பொழிஞ்சு தள்ளுங்க!!!!!
         உன்னையப் பிரிஞ்சு என்ன புது வருஷம்?......னு பீலிங்ச அள்ளி உடுங்க!!!
         புட்டி மக்கள் .... புது வருஷம்.... நண்பர்கள்லாம் விடமாட்டேங்கிறாங்க !!!லிமிட்டத் தாண்ட மாட்டேன்னோ........இல்ல போட்டதுக்கு அப்புறமோ சமாதானப்படுத்துங்க!!!!
        இதுக்கு மேல வேணாம்....................

                                         இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!

                                                                      தேவா.........

No comments:

Post a Comment