Monday 29 December 2008

அமெரிக்க கொடியும்!! இந்தியாவும்!!!


எல்லோருக்கும் வணக்கம்!!
                என்னடா இவன் எப்பப் பார்த்தாலும் அமெரிக்கா பத்தியே எழுதுகிறான்? அமெரிக்கா மேல் பாசமா.......... இல்லை! .........கோபமா? ..............என்று    நினைக்கலாம்!!!!!
                இது இரண்டையும்விட நல்லா ஏதாவது எழுதுவமேன்னு யோசித்தா சில விஷயங்க்ள் ஞாபகம் வரும்!!! அதில் ஒன்னுதான் அமெரிக்க கொடி!!!உலகின் மிகச்சிறந்த கொடி எதுன்னு கேட்டா நீங்க என்ன சொல்வீங்க?................ என்னைக்கேட்டா அது இந்தியக்கொடிதாங்க!!!! 
                ஏன்னு காரணம் உங்களுக்கே தெரியும்??..
                 அமெரிக்கக் கொடியைப்பார்க்கும் பொதெல்லாம்  ஒரு கேள்வி என்னைக்குடையும்!!!
                  எம்.ஜி.ஆர் ப்ருக்ளின் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும்போது பார்த்தீர்கள் என்றால் அந்த பெரிய மருத்துவமனையின் மேல் அமெரிக்கக்கொடி பறக்கும் !!! அதே போலஇன்னொரு  பெரிய கட்டிடத்தில் பக்கவாட்டில் கிட்டத்தட்ட 30 அடி உயரம் தலைகீழாக அமெரிக்க கொடி தொங்க விடப்பட்டு இருக்கும்!
                  அதே சமயம் இந்தியாவில் கடந்த சில பல வருடங்களாக தேசியக்கொடி அரிதாகிவிட்டது! 
                              தியேட்டர்களில் தேசியகீதம் போடுவது இல்லை!! ..
                              அரசு கட்டிடங்களில் கூட தேசியக்கொடிகள் காணோம்!!!
                               சுதந்திர தினம், குடியரசுதினம் மட்டும் கொடி ஏத்துகிறோம்!!
                               அன்னைக்கும் நெறய பேர் ,.....சார்!! செகப்பு மேல வருமா?  ...
                               இல்லை!....பச்சை மேல வருமா?...ன்னு பெரிய சந்தேகம் வேறு கேப்பானுங்க!!!!!!!என்ன காரணம்?
                              இந்திய இளைஞர்கள் அமெரிக்க கொடி போட்ட தொப்பி, கைக்குட்டை, கைப்பை, பனியன்கள், சட்டைகளை ஆர்வத்துடன் உபயொகிப்பதை வருத்தத்துடன் காண்கிறேன்!!!!...........
                 இந்தியக்கொடியை  கொஞ்ச நஞ்சம் உபயோகிப்பவர் மீதும் பத்திரிக்கைகளில் தவறாக உபயோகித்ததாக வழ்க்குகள்!!!..........................எங்கே இந்தியக்கொடி உபயோகித்தாலே தண்டனை கிடைக்குமோ என்று பயப்பட வேண்டியுள்ளது!!!!! 
                 என்னிடம் வந்த ஒரு பிரமுகர்” நாந்தான் (ஒருவரை குறிப்பிட்டு), அவர் மேல் தேசியகொடியை தவறாக தொங்கவிட்டார் என்று கேஸ் போட்டேன் .....பேப்பர்ல போட்டிருந்தாங்க, போனவாரம்!!!!என்றார்,பெருமையுடன்!!!
                 இது பெருமையா??என்ன ?...................................................................................
                                                    
                  முதலில் பயன்படுத்தப்பாருங்கப்பா!!!  பிறகு தவறை உரியவரிடம் சென்று உரிமையுடன் சொல்லி திருத்தலாம்!!!! 

                    என்றும் தாங்கமுடியாத தேசப்பற்றுடன்!!!

                    தேவா!!!!..........................தேசப்பற்றுதேவா!!!!!!.......

No comments:

Post a Comment