Wednesday 31 December 2008

தமிழ் மணம்- ஒரு பகிரங்க இடுகை


தமிழ் மணமே!!

தமிழ் நண்பர்களைத்தேடி
அலையும் போது
உன்னைக்கண்டோம்!!

இத்தனை பதிவர்கள் தமிழிலா
என்று வியப்புக் கொண்டோம்!!

எவரும் பதியும் உரிமை
கண்டு உவகை கொண்டோம்!!

கருத்து சுதந்திரம்
கொடி கட்டிப்
பறக்கக் கண்டோம்!!

கவிதைகள்
இங்கு களிநடம் புரியும்
கோலம் கண்டோம்!!

உலகமே திரண்டு
உள்ளங்கையில்
உருளக்கண்டோம்!!!

தரணித்தமிழர்
ஒன்றாய்க்கூடி
உவக்கக் கண்டோம்!!!

தமிழர் அனைவரும்
தமிழில் எழுதும்
கனவைக்கண்டோம்!!

எழுத்தில் வாராக் கருத்தை
எல்லாம் 
உன் அகத்தில் கண்டோம்!!!

புத்தாண்டு சிறக்க
வாழ்த்துக்கள்
பலர்
வழங்கககண்டோம்!!

உன்னை மறவாமல்
உன்னையும்
வாழ்த்த
உள்ளம் கொண்டோம்!!!!

                          இந்த புத்தாண்டில் 
                          தமிழ் மண நிர்வாகிகளுக்கும் 
                          தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும்
                           தமிழ் மணத்தை
                          மேலும் சிறப்பாக
                           வழிநடத்திச்செல்ல
                          வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!

                           தேவா.....

No comments:

Post a Comment