Friday 5 December 2008

கண்ணீரும் சொரணயும்

தரமில்லாத பொருள் வாங்குவமா நம்ம? வாங்கமாட்டமே.. கத்திரிக்காயைக்கூட நம்ம மக்கள் அமுக்கிப்பாத்துத்தான் வாங்குவோம். வெண்டிக்காய நுனி ஒடக்காம வாங்குரதே இல்லை.கடைக்காரன் மூக்கால அழுவான்.. அதென்னங்க மூக்கால அழுவுறது...எனக்குத்தெரியல! நமக்கு அழுவவே சரியா வராது.அதுவும் ரொம்ப சொந்தக்காரங்க செத்தாக்கூட.."தம்பி நம்மலயெல்லாம் வுட்டுட்டு போய்ட்டார்யா! நான் என்ன பண்ணப்போரேன்னு தெரியலயேன்னு" கட்டிப்புடிச்சு கத்தும்போது‍ நம்ம எப்பிடி அழுவுரதுன்னே நமக்கு தெரியது! என்ன பண்றதுன்னே புரியாது.
             அந்த நேரம் பாத்து நம்ம கண்மணிங்க வருவாள்ங்க பாருங்க!.....
எங்கதான் கண்ணித்தண்ணிய வச்சிருப்பாள்ங்கன்னே தெரியாது...செட்ட சேத்துக்கினு... வீட்டு வாசல் வரைக்கும் "யெப்பிடி செத்துச்சு? நல்லாத்தானே இருந்துச்சி.. சாகுர வயசா அதுக்கு? ஆர்டட்டாக்குங்ராஹ...பிளசரா இருந்துச்சு!!! ரத்தமா வாயில வந்துச்சாம்ல...ஒருவெள மருந்த கிருந்த குடிச்சிருக்குமோ!!!னு பயங்கரமா பேசிக்கிட்டே, செத்ததுலெ பெரிய கொளப்பத்தெயெ பரப்பிக்கிட்டு வர்ரவள்ங்க வீட்டு வாசல்க்கு வந்த்வுடனே என்ன மாயம் பண்ணுவாள்ங்கனே தெரியாது.....அய்யோ ஆத்தாஆஆஆஆஆஆஆ!!!!!நல்லாத்தானே இருந்தீயன்னு ஆரம்பிச்சா கொட்டும்பாருஙக கண்ணுல தண்ணி மக்கள் பின்னி யெடுத்துருவாள்ங்க அழுகை... 
             நம்ம கல்லு மாதிரி நிக்க வேண்டியதுதான்!!!!!
நம்ம ப்ளாக் கண்மணிங்க இந்த வித்தய விளக்கிச்சொல்லுங்களேன்.....வெளக்கமாத்தோட வந்திராதிங்கம்மா!(மரியாதைய பாத்தியளா) முதுகு தாங்காது!!!!!
             ஹாங்... என்னமோ சொல்லவந்து எங்கேயோ பொய்ட்டேன்!!
மருக்கா சங்கதி என்னன்னா எல்லாத்தயும் தரமா வாங்குர நம்ம மக்க குண்டு பாயாத சட்ட வாஙுகுங்போது  கோட்டவிட்டாய்ன்க அப்பு!!!அந்த சட்டய பொட்டுக்குனு போன நம்ம கார்கரேயும்,மிச்ச ரெண்டு ஆபீசரும் கார்லெ இருக்கும்போதே, அவன்க சுட்டு செத்துப்போயிட்டாங்க!!
              நமக்கும் கண்ணீர் வராது....   நம்ம அரசியல் அப்புக்களுக்கும் சொரணை வராது......     

No comments:

Post a Comment