Friday 27 February 2009

உயிருடன் புதைப்பு?

 

பங்களாதேசத்தில் மொத்தம் ஐம்பத்து ஒரு

பங்களாதேச ரைபில்ஸ் படைப்பிரிவைச்சேர்ந்த உயர்

அதிகாரிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு

உள்ளன.

மேலும் 100

உயர் அதிகாரிகளின் விபரங்கள் தெரியவில்லை.இந்த

உடல்கள்  பங்களாதேச ரைஃபில்ஸ் தலைமையக

வளாகத்தில் ஒரு குழியில் மொத்த உடல்களையும்

போட்டு மூடியிருந்ததை இராணுவ அதிகாரிகள்

தோண்டி எடுத்தனர்!சில அதிகாரிகள் குற்றுயிரும்

குலைஉயிருமாக உயிருடன் புதைக்கப்பட்டு

இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டு உள்ளது!!

இந்த சம்பவம் அதிர்ச்சிகரமானது என்று பிரதமர்

ஹசீனா கூறியுள்ளார்.

     முன்னர்,    பங்களாதேசத்தில்பில்கானாடாக்காவில்

எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், உயர்

அதிகாரிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.

பங்களாதேச ரைஃஃபில்ஸ் படையினர் திடீரென

கலவரத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச்சூடு நடத்தினர்

இதில்அந்த பிரிவின் உயர் அதிகாரி டைரக்டர்

ஜெனரல் சுடப்பட்டு இறந்தார். மேலும் பல

அதிகாரிகளும் இறந்தனர்!

அது தற்போது அந்த நாட்டு இராணுவத்தால்

கட்டுப்படுத்தப்பட்டது!!

பங்களாதேச ரைஃஃபில்ஸ் படையினர் தற்போது

சரணடைந்துவிட்டனர்.

 

.

No comments:

Post a Comment