Sunday 22 February 2009

இந்தியர்களுக்கு பெருமை!

    

ஏ.ஆர். ரஹ்மான் அடக்கத்தில் இருந்து ரஹ்மான் எப்போதும் வழுவியதில்லை..

"உயர உயரப்பணிவு கொள்பவனுக்கு இறைவன் கொடுக்கும் பரிசு இது"..

 

ஏ.ஆர்.ரகுமான், இந்த விருதுகளை தனது தயாருக்கு

சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்துள்ளார்.

         

            'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தி‌ற்கு

இசையமை‌‌த்த ஏ.ஆர்.ரகுமான், சிறந்த

இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கான

இசையமைப்பாளர் ஆகிய இரண்டு ஆஸ்கார்

விருதுகளை பெற்று, சாதனை படைத்துள்ளார்.

         இன்று ஆஸ்கார் விருது கிடைத்துவிட்டது, நம்

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு!கனவு கண்டது

கிடைத்துவிட்டதுபேசாமல் சாதித்து விட்டார்.

A.R. Rahman wins two Oscars for "Slumdog"

 

.இந்தியாவில் இதுவரை யாருக்கும் கிடைக்காத

பெருமை ஆகும். இந்தப் படம் அண்மையில்

கோல்டன் குளோப் என்ற சர்வதேச விருதைப்

பெற்றது. இந்தப் படத்தில் இசையமைத்ததற்காக

ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பளார் விருதும்

கிடைத்தது. .

இரட்டை ஆஸ்கார் விருது பெறும் முதல் இந்தியர்

ஏ.ஆர்.ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்லம் டாக் மில்லியனர்' படத்துக்கு சிறந்த

ஒலிக்கலவை பிரிவில் ஆஸ்கார் விருது

கிடைத்துள்ளது. ரெசூல் பூக்குட்டி என்ற இந்தியர் இந்த

விருதை பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தப் பிரிவில்

ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் என்ற

பெருமையை அவர் பெற்றுள்ளார்

 

இந்திய சிறுமியை மையமாக வைத்து

தயாரிக்கப்பட்ட 'ஸ்மைல் பிங்கி' என்ற

குறும்படத்துக்கு சிறந்த டாகுமெண்டரி படத்துக்கான

விருது கிடைத்துள்ளது.

வாழ்த்துவோம் அந்த தமிழனை ! ! ! !

தமிழா ! !  வென்று விட்டாயடா ! ! ! ! ! !

 

.

No comments:

Post a Comment