Friday 20 February 2009

என்னைக் கவர்ந்தவர்கள்!!

        

 நிலாவும் அம்மாவும் காலையிலேயே நம்ம செய்திப்பதிவுக்கு 3 கமெண்ட் அடிச்சாங்க.சரி அவர்கள் பதிவைப்பார்ப்போம்னு போய்ப் பார்த்தேன்.அகராதி புடிச்சவ!

         பாப்பா நிலாவுடைய அருஞ்சொல் அகராதியை வெளியிட்டு இருந்தார்கள்!!(நிலா போல கூலா இருப்பாங்க!!!!!!!)

         அதுகுழந்தைகளில்மழலைத்தொகுப்பு!!.அருமையா இருந்த்து!  ரெண்டு கமண்ட் போட்டுட்டு வந்தா மருக்கா வரச்சொல்லி உத்தரவு மெயிலில் வருது!!!

          சரின்னு அங்கே போனா நிலா அம்மாவுடைய ரெண்டாவது முகம்? ”பொன்னாத்தா என்ற சண்டைக்கோழி”!!!எனக்குப்பிடித்தவர்கள்!

          தலைப்பைப்பார்த்தவுடன்   ஆஹா! ஏதோ வெவகாரம், எஸ்கேப் என்று மண்டை ஓரத்தில் மணி அடிச்சது.

           சரி நம்ம இதுக்கெல்லாம் பயந்த ஆளான்னு உள்ளே போனா நல்லா மாட்டிக்கிட்டேன்.!  அவுங்க ஆபீசில் வேலையில்லாத நேரத்தில் (அதாவது காலை 10.00-மாலை 6.00 வரை!  சும்மா! ஜோக்கு! கோவிக்கவேண்டாம் நிலா அம்மா!)   உங்களைக்கவர்ந்த மனிதர் யார்? என்று எல்லோரும் சொல்லனும்னு ஒரு  முடிவு பண்ணி அதைத் தொடர் விளையாட்டா ஆரம்பித்து விட்டாங்க. அதோட விட்டா பரவாயில்லை.

அவங்க ஆபீஸில் ஆரம்பித்த தொடர் விளையாட்டு கணினிக்குள் வைரஸ் மாதிரி பரவி பலரைத் தாக்கி விட்டது! அதுல என்னையும் கலந்துக்கச்சொல்லி அழைப்பு!! 

வேறு வழி!

எனக்குப்பிடித்தவர்-- புராணகாலத்தில்

1.கர்ணன்! கர்ணனைப் பிடிக்காதவர் உண்டோ? போர் என்றாலே சாவுதான்! எவனோ 2 பேர் பிரச்சினையில் ஆயிரம் பேர் சாகும் இடம் போர்க்களம்! அதிலேயே நேர்மையை நிலைநாட்டினான் கர்ணன்!!  இறைவனை(கண்ணனை) மனிதன் விஞ்சியது இங்குதான் !  

2.அம்பேத்கார்! காந்தி போன்ற மாஸ் லீடர் இருந்த காலத்தில் எல்லோரும் கதருக்கு மாறிய காலத்தில் தனித்து சிந்தித்த ஜீவ நதி! பணம், பதவிக்கு ஆசைப்பட்டு வெளிநாடுகளில் இந்தியாவில் வந்தவாய்ப்புகள் துறந்து  போராடிய பொருளாதார மேதை!       

இந்த இருவர் போதுமே இப்போது!

                                                                                                   ”விதிமுறைப்படி நீங்க குறைந்த பட்சம் 2 பேரை அழைக்கணும்” .

கூப்பிட்டுவிடுவோம்!

காசா ! பணமா ?

நான் கூப்பிடுவது

1.ஜமால்!     கற்போம் வாருங்கள்!   

2.ஆதவாகுழந்தை ஓவியம்!

3.செய்யது மழைக்கு ஒதுங்கியவை!

4.அபு அஃப்ஸர்என் உயிரே!

5.வேத்தியன் வேத்தியனின் பக்கம்

6.இராகவன் நைஜீரியா..

தேவா..

No comments:

Post a Comment