Friday 6 February 2009

போலிகள் உசார்!!போலீஸ் உசார்!!

போலி சாமியார், போலி வைத்தியர்(நான் இல்லை) கேட்டு இருக்கோம்! ஆனா போலி நீதிபதி கேள்விப்பட்டு இருக்கீங்களா?

எங்கேன்னு கேக்கிறீங்க? வேற எங்கெ? சட்டம் ஒழுங்கு கோலோச்சும்(தூய தமிழ் வந்து விழுது)......................
நம் தமிழ்நாட்டில்தான்.
.மாப்பு!!!(அதாங்க நம்ம ஆளு) ஒரு காரை லோன்ல செட் பண்ணி சைரன்,தேசிய கொடின்னு செம அளப்பர............
கேட்டா கேரளாவில் ஓய்வு பெற்ற நீதிபதி!

போலீஸ் சல்யூட்,குவாலிஸ் கார்னு ஏக ரகளை! பக்கத்து வீட்டு பார்ட்டி சந்தேகமாகி போலீஸில் போட்டுக்குடுத்துட்டான்..

போலீஸ் விசாரிச்சா பார்ட்டி லண்டன் போயிட்டார்னு கப்ஸா.

மொபைலில் கால் பண்ணா லண்டனில் இருந்து நேரா வந்து பார்க்கிறேன்னு டூப்.
உள்ளூரிலிருந்து சிக்னல் வருதென்னு பார்த்து வீட்டிலே போய் தேடினா பார்ட்டி வீட்டில் மறைவா இருந்தார்.
அப்புறம் அவர் சிங்கப்பூர் ரிடர்னாம்!!!
இதனால் தெரிவிப்பது என்னவென்றால் சிங்கப்பூர் ஆட்களிடம் ஜாக்கிரதை....இஃகி..இஃகி..இஃகி..
கொசுறு: காரை லோன் வாங்க போலி அட்ரெஸ் கொடுத்து உள்ளார். அதுக்கு பணம் கட்டாம நம்பரை மாத்தி விட்டார்!!!!!!!!!! சூப்பர் நீதிபதி..

இப்ப்டின்னா போலீஸை பாத்து போலீசே ஓடுறதை கேட்டு இருக்கீங்களா? நம்ம கோயம்புத்துரிலதான்!

சில தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்து சில நாட்களே ஆன திரைப்படங்களின் சிடி விக்கிறாங்கன்னு திருட்டு வீடியோ ஒழிப்பு ஏட்டு,போலீஸ்கு ரகசிய தகவல் கிடைத்து

இடத்திற்கு விரைந்த திருட்டு வீடியோ ஒழிப்பு போலீஸ் மக்கள் அவனுங்கட்ட 10000 கேட்டு தொல்லை! எப்படி!

எவனோ இதையும் போட்டுக்கொடுத்து விட்டான்..... (போட்டுக்குடுக்கிறவன் தொல்லை தாங்க முடியலைப்பா! தொழில் பண்ண வுட மாட்றானுங்க!!!)
அப்போது அங்கு அதிரடியாக வந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பியைக் கண்டதும் லஞ்ச ஒழிப்பு போலிஸ் சுவர் ஏறிக் குதித்து தப்பியோடி விட்டனர்( நம்ப ஆளுங்க ஓடுனா புடிக்க முடியுமா?)

சும்மா உக்காராம ஏதாவது எழுதுவோம்னு ஏதோ எழுதினேன்.

.a href="http://blogintamil.blogspot.com/2009/02/blog-post_06.html"

அப்படியே பொடிநடையா மேலே உள்ள வலைச்சரம் பக்கம் வாங்க.இன்னிக்கு முழுக்க கடை ரம்யாக்கா
தான்!
வந்து ரெண்டு கும்மி அடுச்சிட்டு போங்க..

No comments:

Post a Comment