Tuesday 17 February 2009

எழுத முடியல! ஏகப்பட்ட ஆணி,கடப்பாரை!!!

 

 

                ஏகப்பட்ட ஆணிகள்,கடப்பாரைகளால் எழுத

முடியவில்லை. மன்னிக்கவும்! என்று ரொம்ப நம்ம

அலட்டிக்கிறோம். உண்மைதான்!

நம்மில்நிறையபேருக்கு அப்படித்தான்! எனக்குக்கூட!
                 

                  இங்கே ஒரு ஆசாமியைப்பாருங்க!
                 

                  மூக்கு மேல வெரல் வைக்கிறமாதிரி இருக்கு இவர் செய்த வேலைகள்.
சொல்லவா?

                  1.தன் சொந்த வீட்டைத் தானே வடிவமைத்துக்கட்டினார்!

                  2.அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை நிர்மானித்தார்.

                  3.அவரது மாநில தலைமைச்செயலகத்தை உருவாக்கினார்.

                  4.லெட்டெர் காபி அச்சு இயந்திரம் கண்டு பிடித்தார்.

                 5.ஏழுநாள் காலண்டர் கடிகாரம் கண்டு பிடித்தார்.

                6.இருபுறமும் திறக்கும் இரட்டைக்கதவுகளை உருவாக்கினார்.

                7.வயலினில் தேர்ச்சி பெற்றார்.

                8.லத்தீன்,இத்தாலி,ஃப்ரென்ச்,ஜெர்மன்,மற்றும் பல பழங்குடியினர் மொழி கற்றார்.

               9.பல்கலைக்கழக வேந்தரானார்.

              10.நண்பர்,உறவினருக்கு 16000 கடிதங்கள் எழுதினார்.

               11.அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக இருந்தார்.

              12.அமெரிக்க அதிபராக இரண்டு முறை இருந்தார்????

               அப்பாடி  இவர் என்ன மனிதனா?

யார்னு கேக்கிறீங்களா?

                தாமஸ் ஜெஃபர்சன்!!!

3 காலம் டெம்ப்ளேட் மாற்றுவது எப்படி?

ப்ளாக்கர் எழுதியது மாறாமல்!!!

தேவா..

1 comment:

Anonymous said...

அப்பா....டி இவ்ளோ நல்ல விஷயங்கள் செய்தரா?உண்மைதான்.எங்களுக்குள் இருக்கும் திறமைகள் எங்களுக்கே தெரியாமல் இருக்கும்.முயற்சி வேணும்ன்னு சொல்றீங்க.முயற்சி செய்றதுக்கு ஒரு முயற்சி வேணுமே.அங்கதான் சிக்கல்.

Post a Comment