Tuesday 3 March 2009

பாக் குண்டு வீச்சு-சில மர்மங்கள்!

[Sri+Lanka+have+no+bad+feelings+for+Pakistan+Younus.jpg]6 Sri Lanka cricketers hurt, 7 others killed in Lahore shooting

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என காவல்துறையினருக்கு ஏற்கனவே தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் பஞ்சாப் மாநில உளவுத்துறைக்கு ஏற்கெனவே தெரிந்து பாதுகாப்பை பலப்படுத்தியாதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடையில், அதன் காரணமாகவே இன்று கிரிக்கெட் வீரர்கள் மாற்று வழியில் மைதானத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாற்று வழியில் அழைத்து வரப்பட்ட போதும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது அந்நாட்டில் இலங்கை வீரர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடு உள்ளதை உறுதி செய்துள்ளது

இதெல்லாம் சரிதான்!!!

இந்த செய்தியைப்பாருங்கள்!!! இது எதேச்சயாக ஏற்பட்டதாம்! நம்ப முடியுதா?

பாகிஸ்தான் அணி 5 நிமிடங்கள் தாமதமாகச்சென்றதால் தாக்குதலில் இருந்து தப்பித்தது!!

தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து 5 நிமிடம் தாமதமாக அணி புறப்பட்டது, பெரும்பாலும் முதல் நாள் டாஸ் போடுவதால் முதல் நாள் முன்னதாகவே பாக் அணி கிளம்பியது! இன்று எதனாலோ பாக் அணி காப்டன் நாம் சற்று தாமதமாகக் கிளம்புவோம் என்று கூறினார்!

என்று அணியின் பயிற்சியாளர் இண்டிகாப் ஆலம் கூறியுள்ளார்!!!!!!

ஏன் முன்னமேயே குண்டு வெடிப்புப் பற்றி தெரியும் என்கிறார்கள்!! பின் மெதுவாகக்கிளம்பி சென்றதாகக்கூறுகிறார்கள்!!! இரண்டையும் சேர்த்துப்பாருங்கள்!!!

பாக் அணி மைதானம் வந்து சேரும் போது பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கிச்சூடு ஏற்பட்டூள்ளது என்று கூறி அணியை திருப்பி ஹோட்டலுக்கு அனுப்பிவிட்டார்களாம்!! நல்ல வேளையாக பாக் அணி தப்பித்தது என்கிறார்!!

ஏதோ சொல்கிறார்! கேட்டுக்கொள்வோம்!!!

இதற்கிடையில் பாகிஸ்தான் காப்டன்”இது இலங்கை,பாகிஸ்தான் அணிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை!!!நாங்கள் இருவரும் எவ்வளவு மோசமான சூழ்நிலைகளிலும் விளையாடத் தயாராக உள்ளோம்”

என்று கூறியுள்ளார்...

ஆளை விடுங்கடாப்பா சாமி!!!

No comments:

Post a Comment