Sunday 22 March 2009

மரியாதைக் கொலைகள்? Honour killing!

பாகிஸ்தான், ஜோர்டான்,சௌதிஅரேபியா,சிரியா,துருக்கி,பாலஸ்தீனம்,இஸ்ரேல்,சிசிலி,கார்சிகா போன்ற நாடுகளில் ஒருவர் ஜாதி அல்லது கிளான் விட்டு காதலித்தாலோ,அல்லது திருமணம் செய்து கொண்டாலோ அல்லது தவறாக நடந்தாலோ அதனை பெரிய அவமானமாகக் கருதுவார்கள்!

நம்ம ஊரிலும் அப்படித்தாங்க என்று சொல்கிறீர்களா? உண்மைதான்.

ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால் அவர்கள் கொலை செய்து விடுவார்கள்! நம் ஊரிலும் கொல்லுகிறார்களே என்றால் ஆமாம்!

இங்கு அதற்கு தண்டனை உண்டு!

அங்கு பெரிய தண்டனை கிடையாது!

இப்படிக்கொல்லுவதற்கு ”ஹானர் கில்லிங்”

என்று பெயர்.

ஜோர்டான் நாட்டில் 19 வயது பெண் அலங்காரம் செய்து கொண்டு வீட்டுக்கு வெளியில் சென்று ஒரு நபருடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்.

இதைப் பார்த்த அவளுடைய அப்பாவும் சகோதரரும் கோபம் கொண்டு அடித்தே கொன்று விட்டார்கள்.

ஜோர்டானில் ஒவ்வொரு வருடமும் 20 பெண்கள் இதுபோல் கொல்லப்படுகிறார்கள்!

ஜோர்டான் சட்டம் 340,98 களின்படி இது அனுமதிக்கப்பட்டு உள்ளது!

இறந்த பெண்ணின் கன்னித்தன்மை பாதிக்கப்பட்டு இருந்தால் ஆணுக்கும் தண்டணை உண்டு!

,ஜூன் 2007ல் கொல்லப்பட்ட ஒரு பெண்!

இந்தியா

இந்தியாவில் 1.1.2003ல் 21 வயது சுனிதா தேவி,அவருடைய காதலன் ஜஸ்பீர்சிங் ஆகியோர் பல்லா கிராமம் ஹரியானா மாநிலத்தில் இந்த மரியாதைக்கொலை செய்யப்பட்டனர்.

http://blogs.reuters.com/gbu/2008/05/22/honor-killing/

Photo

மேலேயுள்ள படத்தில்:ஹானர் கில்லிங் செய்யப்பட்ட சாரா ஆமினா.

பெர்லின்

ஹாடின் சருகுவின் துருக்கிய முஸ்லிம் சகோதரர்கள் அவரை சுட்டுக்கொன்றனர்

கனடா

கனடாவில் க்ரேட்2 மாணவி அவரது அப்பாவால் பர்தா அணியாததால் கொல்லப்பட்டார்!

மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வந்தாலும் தீவிரமான தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும் மனிதர்களின் மனம் மாறினாலே இத்தகைய கொடுமைகளில் இருந்து பெண்கள் மீள முடியும்!!

No comments:

Post a Comment